<?xml version="1.0" encoding="utf-8" ?><rss version="2.0" xmlns:atom="https://www.w3.org/2005/Atom" xmlns:media="https://search.yahoo.com/mrss/"
xmlns:creativeCommons="https://backend.userland.com/creativeCommonsRssModule">
<channel>
<title>இன்றைக்கான வசனம்</title>
<description>நாேதா தயான   உளடக  ேவதவாைத, சதைனம ெஜப.</description>
<link>https://www.verseoftheday.com/ta/</link>
<lastBuildDate>Fri, 08 May 2026 02:00:00 -0500</lastBuildDate>
<language>ta</language> 
<copyright>Copyright (c) 1996-2026, Heartlight, Inc. All rights reserved.</copyright>
<atom:link href="https://www.verseoftheday.com/rss/ta/" rel="self" type="application/rss+xml" />

<item><title>இன்றைக்கான வசனம் -  4:5-6</title><link>https://www.verseoftheday.com/ta/05082026/</link><guid>https://www.verseoftheday.com/ta/05082026/</guid><pubDate>Fri, 08 May 2026 00:00:00 -0500</pubDate><description>...காலத்தைப் பிரயோஐனப்படுத்திக்கொள்ளுங்கள். 
அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக. 
 

 &amp;#8212; &lt;a href=&quot;https://www.verseoftheday.com/ta/05082026/&quot;&gt; 4:5-6&lt;/a&gt;&lt;h4&gt;இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்&lt;/h4&gt;தற்செயலான தயவுள்ள செயல்கள்  என்று எதுவும் இல்லை, நாம் அறிந்து ஒரு நோக்கத்தோடே செய்யப்படும் செயல்களே காலத்தைப் பிரயோஐனப்படுத்திக்கொள்ளும். நாம் செய்யக்கூடிய நன்மைகளைப் பற்றி சிந்திப்போம். அன்புள்ள மற்றும் நன்மை பயக்கும் வழிகளில் நாங்கள் நடக்கும்படி எங்களை ஒப்புவித்திருக்கிறோம் .  நாங்கள் தயவுள்ளவர்களாய் இருக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப் பட வேண்டும் என்று ஜெபிக்கிறோம் . பின்னர் அந்த வாய்ப்பு நம்மை தயவுடன் இருக்க அழைத்து செல்கிறது . இதில் தற்செயலாக எதுவும் இல்லை! இது கிரியைகளினால் மாத்திரமல்ல, வார்த்தைகளிலும் மெய்யாய் இருக்கிறது . வீணான வார்த்தைகளினால் அலப்புவதை விட , மற்றவர்களை ஆசீர்வதிக்கவும், இன்னுமாய் கிறிஸ்துவை அறிந்துகொள்ள உதவவும் நல் வார்த்தைகளையே பயன்படுத்துமாறு வலியுறுத்தப்படுகிறோம்.&lt;h4&gt;என்னுடைய ஜெபம்&lt;/h4&gt;பிதாவே , இந்த வாரம் நான் பிதற்றின வார்த்தைகளுக்காக அடியேனை மன்னியுங்கள். இந்த கவனக்குறைவான வார்த்தைகள் இரு மடங்கு பாவங்களுக்கு சமம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன் - நான் அதைச் செய்தபோது ஒரு முறை  பாவத்திற்குள்ளானேன் மற்றும் இரண்டாவது முறையும் பாவம் செய்தேன் , என்னுடைய  வார்த்தையில் உண்டாகும் மீட்பையும், அந்த வார்த்தையினால் அவர்களுக்கு உதவும் படியான வாய்ப்பையும் நான் நோக்கிப் பார்க்கவில்லை . ஆண்டவரே,  என்  வாழக்கையின் பாதையில் நீர் ஆசீர்வதிக்க வைத்த மக்களை நான் காணும்படியாய் என் கண்களைத் திறந்தருளும் .  ஆசீர்வதிக்கப்பட்ட இயேசுவின் நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.&lt;p&gt;&lt;em&gt;இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை  சகோதரர் பில்வேர்  அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள  phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;</description></item><item><title>இன்றைக்கான வசனம் -  5:16-18</title><link>https://www.verseoftheday.com/ta/05072026/</link><guid>https://www.verseoftheday.com/ta/05072026/</guid><pubDate>Thu, 07 May 2026 00:00:00 -0500</pubDate><description>எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். 
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். 
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள். அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. 
 

 &amp;#8212; &lt;a href=&quot;https://www.verseoftheday.com/ta/05072026/&quot;&gt; 5:16-18&lt;/a&gt;&lt;h4&gt;இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்&lt;/h4&gt;எங்கே உங்களுடைய இருதயம் வாழ்கிறது? இந்த வசனங்கள் இதை குறித்தே பேசுகிறது. நம் இருதயத்துடன் நாம் அதிக நேரம் செலவிடும் இடத்தைப் பற்றியது. தேவன் எவ்விடத்திலும் இருக்கிறார் என்ற சிந்தை அல்லது கவனம் எப்பொழுதும் உங்கள் வாழ்வில் தொடர்ந்து இருக்கிறதா? உங்களுடைய எல்லா ஏற்றத் தாழ்வுகளிலும் அவர் கண்களால் காணமுடியாத ஆனால் எப்போழுதும் உங்களோடிருக்கிறவரா? அல்லது நமக்கு சாதகமான நேரங்களில் நம்மோடு இருக்கிறாரா மற்றும் நம்முடைய விருப்பான காலங்களில் அல்லது சுமூகமான வாழ்க்கை செல்கிறது என்று நாம் நினைக்கும் சூழ்நிலைகளில் அவர் இல்லை என்று கருத்தில் கொள்கிறோமா? நாம் எப்பொழுதும் தனித்து விடப்படுவதில்லை என்று அறிந்து கொள்வதே மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும். ஜெபம் என்பது எப்பொழுதும் ஆவியிலிருந்து -தேவஆவியானவருடனும்,பிள்ளை- பிதாவினிடமும், மனுஷன்- தேவனிடமும் தொடர்ந்து பேசுவதாகும். ஸ்தோத்திரமும்,சந்தோஷமும் ஆகியவை வெளிப்புற சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதற்கான சிறந்த நினைவூட்டலாய் இருக்கிறது .&lt;h4&gt;என்னுடைய ஜெபம்&lt;/h4&gt;விலையேறபெற்ற மற்றும் நீதியுள்ள பிதாவே , எப்போதும் உம்முடைய சமூகம் இருப்பதற்காக உமக்கு நன்றி. இன்று உம்முடைய பிரசன்னம் பற்றிய ஆழமான நன்றியறிதல் மற்றும் ஆழமான விழிப்புணர்வை எனக்குத் தாரும் . உம்முடைய கிருபையை கொண்டு நீர் என்னை இரட்சித்து,  அருளின சந்தோஷத்தை என் வாழ்க்கையிலே அவைகள் பிரதிபலிக்கட்டும். உம்முடைய வீடாகிய திருச்சபையை என் இருதயம் எப்பொழுதும் வாஞ்சிக்கட்டும் . என் இரட்சகரும் சகோதரருமான இயேசுவின் நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.&lt;p&gt;&lt;em&gt;இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை  சகோதரர் பில்வேர்  அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள  phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;</description></item><item><title>இன்றைக்கான வசனம் -  5:16</title><link>https://www.verseoftheday.com/ta/05062026/</link><guid>https://www.verseoftheday.com/ta/05062026/</guid><pubDate>Wed, 06 May 2026 00:00:00 -0500</pubDate><description>நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. 


 &amp;#8212; &lt;a href=&quot;https://www.verseoftheday.com/ta/05062026/&quot;&gt; 5:16&lt;/a&gt;&lt;h4&gt;இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்&lt;/h4&gt;நம்முடைய பாவங்களை அறிக்கையிடுவது என்பது நம்முடைய பாவத்திற்காக இரண்டு காரியங்களைச் செய்வதாகும். ஒன்று, தேவனுடைய பார்வையில் பாவம் என்னவாக இருக்கிறது என்று நாம் உணர்கிறோம்.  மற்றொன்று, நாம் நம்முடைய இரகசியங்களிலிருந்து விடுபட்டு, நமது பலவீனம், தவறுகள் , தோல்விகள் மற்றும் பாவங்களைப் குறித்து மற்றொரு கிறிஸ்தவரிடம் உண்மையாக அறிக்கையிட வேண்டும் . யாக்கோபின், வார்த்தைகள் வல்லமை வாய்ந்தது. இந்த அறிக்கையிடுதல் மன்னிப்பை மாத்திரம் கொடுப்பதில்லை, இன்னுமாய் சொஸ்தமடையவும் செய்கிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.&lt;h4&gt;என்னுடைய ஜெபம்&lt;/h4&gt;பரிசுத்த பிதாவே , நான் பாவம் செய்தேன். நான் இப்போது எனது இரகசியமான எல்லா பாவங்ளையும்  அறிக்கையிடுகிறேன் . உம்முடைய மன்னிப்பையும், சோதனையையும் மேற்கொள்ளவதில் என்னைப் பலப்படுத்த உமது பரிசுத்த ஆவியை  தந்தருளும் . நான் உமக்காக வாழ விரும்புகிறேன், என்னுடைய சொந்த பாவமமோ, அல்லது மற்ற எந்தப் பாவமோ என்னைச் சிறைபிடித்து , உம்மிடமிருந்து என்னை பிரித்து, தூரமாய் கொண்டு செல்லாதபடி  விரும்புகிறேன். இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.&lt;p&gt;&lt;em&gt;இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை  சகோதரர் பில்வேர்  அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள  phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;</description></item><item><title>இன்றைக்கான வசனம் -  4:6-7</title><link>https://www.verseoftheday.com/ta/05052026/</link><guid>https://www.verseoftheday.com/ta/05052026/</guid><pubDate>Tue, 05 May 2026 00:00:00 -0500</pubDate><description> நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். 
அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். 
 &amp;#8212; &lt;a href=&quot;https://www.verseoftheday.com/ta/05052026/&quot;&gt; 4:6-7&lt;/a&gt;&lt;h4&gt;இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்&lt;/h4&gt;தேவன் நம் ஜெபங்களுக்கு செவி கொடுக்க  விரும்புகிறார். ஆனால், நாம் நமக்காக மாத்திரமே ஜெபிப்பதில் அதிக கவனம் செலுத்துவதை விட,  எப்போதும் நன்றி செலுத்துவதையே நினைவில் கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஜெபத்தை ஒரு விண்ணப்ப வரியாக மாற்றுவது நமக்கு மிகவும் எளிதானது. நன்றியறிதலும், துதித்தலும் நமது ஜெபத்திலிருந்து அகற்றப்படும்போது நாம் வருத்தத்திற்குள்ளாகிறோம்  . 
நம்முடைய ஜெபங்களில் துதி குறையும் வேளைகளில் இருதயம் சோர்வடைகிறது. அதனால் நம் பிரச்சனைகளையே யோசித்து கொண்டு விண்ணப்பம் செய்வதினால்  அந்த ஜெபம் வெறும் நம்முடைய தேவைகளின் பட்டியலாகவே இருக்கும் .&lt;h4&gt;என்னுடைய ஜெபம்&lt;/h4&gt;கிருபையுள்ள தேவனே , உம்மை  துதிப்பதற்கு எனக்கு பல காரணங்கள் உண்டு . சோதனை மற்றும் கஷ்டங்களை எதிர்கொள்ளும் போது, ​​என் நம்பிக்கையை மறுபடியும் எழுப்ப உம்முடைய  வாக்குத்தத்தங்கள் உள்ளன. ஜெய வேளைகளில்  நீர் எனக்கு  தந்தருளின தாலந்துக்கு  உமக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன்  . ஒரே காரியங்களை தொடர்ந்து செய்வதினால் சோர்ந்து போகும் வேளைகளில் , உம் ஆச்சரியமான வழி நடத்துதல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை உண்டாகுகிறது . தேவனே நீர் மகா பெரியவராக இருந்தும் மிகவும் அன்பாய் இருப்பதற்காக உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தினாலே . ஆமென்.&lt;p&gt;&lt;em&gt;இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை  சகோதரர் பில்வேர்  அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள  phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;</description></item><item><title>இன்றைக்கான வசனம் -  7:14</title><link>https://www.verseoftheday.com/ta/05042026/</link><guid>https://www.verseoftheday.com/ta/05042026/</guid><pubDate>Mon, 04 May 2026 00:00:00 -0500</pubDate><description>என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.  &amp;#8212; &lt;a href=&quot;https://www.verseoftheday.com/ta/05042026/&quot;&gt; 7:14&lt;/a&gt;&lt;h4&gt;இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்&lt;/h4&gt;தாழ்மை என்பது நமது வாழ்க்கை முறையில் மிகவும் மதிப்புமிக்க சொத்து அல்லது மிகவும் விரும்பத்தக்க குணம் அல்ல. ஆனால், தாழ்மை மிகவும் தேவையான ஒன்றாகும் - அது கட்டளையிடப்பட்டதால் அதிக கடினமானதில்லை, ஆகையால் தாழ்மையை நாம் &quot;எப்படியாயினும் பெற்றுக்கொள்ள வேண்டும் &quot;. ஒவ்வொரு ஆண்டும் நீதியிலும் , குணாதிசயத்திலும்  மற்றும் ஆவிக்குரிய காரியங்களிலும் பெரிதான தோல்விகள் மற்றொரு அலையை நம் வாழ்வில் கொண்டுவருகிறது. நம்முடைய ஷேமமான நாட்களில் கூட, நாம் அனைவரும் தேவனுடைய பரிசுத்தத்திலிருந்து வீழ்ந்துப்போகிறோம். நற்பண்புகளில் (தாழ்மை) முன்னேறுவதற்குப் பதிலாக, நாம் அவற்றில் பின்னடைவதை காண்கிறோம்.  நம்மை தாழ்த்தி, ஜெபம்பண்ணி, அவருடைய முகத்தைத் தேடி, நம் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால்  தேவனை அணுகமுடியும்.  ஆகவே, நாம் மனத்தாழ்மையுடன் இருந்து நம்முடைய பாவங்களைத் புறம்பே தள்ளி ,   
தேவனை நோக்கி கூப்பிட்டு, அவரைத் முழுமனதுடன் தேடுவோமாக!
&lt;h4&gt;என்னுடைய ஜெபம்&lt;/h4&gt;பரிசுத்தமும் சர்வவல்லமையும் கொண்ட தேவனே , உமது செயல்கள் அற்புதமானவைகள் ,நீர் உண்மையுள்ளவர் என்பது மகத்தானது, உமது இரக்கமும், கிருபையும் அத்தகைய சிறந்த ஆசீர்வாதங்கள். ஆயினும், உமக்கும் அடியேனுக்கும் இடையே உள்ள தூரம் நம்பமுடியாதது , அப்படிப்போல உம்முடைய பரிசுத்தமும், மேன்மையும் அடியேனுடைய பெலவீனங்களுக்குமுள்ள தூரமும் அதிகம் ஆயினும் நீர் என்னருகில் இருந்து எனக்கு செவிக்கொடுக்கிறீர் என்பதை அறிந்து உம்மிடம் வருகிறேன். நீர் மிகவும் அற்புதமாய் எங்களை ஆசீர்வதித்ததை நானும், என் உறவுகளும் , என்னைச் சுற்றியுள்ள தேசமும் தவறவிட்டு விட்டோம்  என்று ஒப்புக்கொள்கிறேன். இந்த நேரத்தில் உம்மை தெளிவாய் அறிந்துகொள்ளும் வகையில் எங்கள் தேசத்தில் நீர் இருக்கிறதை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவைகளை அடியேன் இயேசுவின் நாமத்தின் மூலமாய் விசுவாசத்தோடு கேட்கிறேன். ஆமென்.



&lt;p&gt;&lt;em&gt;இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை  சகோதரர் பில்வேர்  அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள  phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;</description></item><item><title>இன்றைக்கான வசனம் -  12:12</title><link>https://www.verseoftheday.com/ta/05032026/</link><guid>https://www.verseoftheday.com/ta/05032026/</guid><pubDate>Sun, 03 May 2026 00:00:00 -0500</pubDate><description>நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள், உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள், ஜெபத்திலே உறுதியாய்த்தரித்திருங்கள். 


 &amp;#8212; &lt;a href=&quot;https://www.verseoftheday.com/ta/05032026/&quot;&gt; 12:12&lt;/a&gt;&lt;h4&gt;இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்&lt;/h4&gt;சில நேரங்களில் ஜீவிப்பதற்கான ஒரு சிறந்த  வழி உறுதியுடன் இருந்து,   நாம் பார்க்கக்கூடிய காரியங்களும். அல்லது சூழ்நிலையும் எவ்வாறாயினும்  தேவன் மீது அதிக விசுவாசத்துடன் நம்பிக்கையாய் இருக்க வேண்டும். நம்பிக்கையின் மூலமாக சந்தோஷமாயிருப்பதை தெரிந்துக் கொண்டு , உபத்திரவ காலத்திலே பொறுமையுடன் உறுதியாய் இருப்பதை தேர்ந்துதெடுத்து , நம்முடைய விருப்பங்களையும் இன்னுமாய் முடிவுகளையும் ஜெபத்திலே விசுவாசமுள்ளவர்களாய் இருப்பதை அறிந்துகொள்ளுவோம் , ஏனென்றால் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய தேவன் நம் விண்ணப்பங்களையெல்லாம் கேட்பதினால் நம் சூழ்நிலைகளை அவரால் மாற்ற முடியும் என்ற  நம்பிக்கையுடன் இருப்போம் . 
&lt;h4&gt;என்னுடைய ஜெபம்&lt;/h4&gt;வல்லமையுள்ள தேவனே , என்னில் ஒரு திடமான மற்றும் உறுதியான இதயத்தை உருவாக்குங்கள், அதனால் எனக்கு எவ்வளவு உபத்திரம் இருந்தாலும் மகிழ்ச்சியுடன் நிலைத்திருப்பேன். உமது விசுவாசமுள்ள குமாரனின் நாமத்தினாலே  நான் ஜெபிக்கிறேன். ஆமென்.&lt;p&gt;&lt;em&gt;இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை  சகோதரர் பில்வேர்  அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள  phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;</description></item><item><title>இன்றைக்கான வசனம் -  5:14-15</title><link>https://www.verseoftheday.com/ta/05022026/</link><guid>https://www.verseoftheday.com/ta/05022026/</guid><pubDate>Sat, 02 May 2026 00:00:00 -0500</pubDate><description>நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். 
நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம். 

 &amp;#8212; &lt;a href=&quot;https://www.verseoftheday.com/ta/05022026/&quot;&gt; 5:14-15&lt;/a&gt;&lt;h4&gt;இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்&lt;/h4&gt;தேவனுக்கு முன்பாக நமது தைரியம் . நீங்கள் தேவனுடைய வார்த்தையை சிந்தித்து கொண்டிருந்தால் அது ஒரு வகையான ஒப்புமை . ஆயினும்கூட, தேவனின் வலது பாரிசத்தில் இயேசுவானவருடைய சமூகம் மற்றும் பரிசுத்த ஆவியின் ஒத்தாசையின் மூலமாய் , நாம் நம்பிக்கையுடன் இருக்க முடியும் இன்னுமாய் அண்டசராசரத்தையும் சிருஷ்டித்தவரின் முன் தைரியமாக வந்து, அவர் நம்முடைய ஜெபங்களுக்கு செவிசாய்ப்பது மட்டுமல்லாமல், நம்மைக் கவனித்துக் கொள்கிறார் என்பதையும் அறிந்து கொள்ளலாம். ஆஹா,  என்ன அருமையாய் செவிக்கொடுப்பவர் ! கடைசியாக ஒரு  விஷயம், அவர் நாம் கேட்பதற்கும் மிகவும் அதிகமாய் செய்கிறவர் .&lt;h4&gt;என்னுடைய ஜெபம்&lt;/h4&gt;அப்பா பிதாவே , உம்முடைய  கிருபையினாலே செவிக்கொடுக்கும் காதுகளுக்காக அடியேன் வார்த்தைகளால் விவரித்து சொல்ல முடியாததை விட  மிகவும் அதிகமாய்  நான் நன்றி கூறுகிறேன். என் சகோதரனாகிய இயேசுவின் அதிகாரத்தினாலும்,  என்னுள் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியின் கிருபையினாலும், இந்த நாளில் உங்களுக்கு என் நன்றியையும் அன்பையும் சமர்ப்பிக்கிறேன். ஆமென்.&lt;p&gt;&lt;em&gt;இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை  சகோதரர் பில்வேர்  அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள  phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;</description></item>  </channel>
</rss>
