<?xml version="1.0" encoding="utf-8" ?><rss version="2.0" xmlns:atom="https://www.w3.org/2005/Atom" xmlns:media="https://search.yahoo.com/mrss/"
xmlns:creativeCommons="https://backend.userland.com/creativeCommonsRssModule">
<channel>
<title>இன்றைக்கான வசனம்</title>
<description>நாேதா தயான   உளடக  ேவதவாைத, சதைனம ெஜப.</description>
<link>https://www.verseoftheday.com/ta/</link>
<lastBuildDate>Sat, 08 Aug 2026 02:00:00 -0500</lastBuildDate>
<language>ta</language> 
<copyright>Copyright (c) 1996-2026, Heartlight, Inc. All rights reserved.</copyright>
<atom:link href="https://www.verseoftheday.com/rss/ta/" rel="self" type="application/rss+xml" />

<item><title>இன்றைக்கான வசனம் -  149:4</title><link>https://www.verseoftheday.com/ta/08082026/</link><guid>https://www.verseoftheday.com/ta/08082026/</guid><pubDate>Sat, 08 Aug 2026 00:00:00 -0500</pubDate><description>கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார், சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார். 


 &amp;#8212; &lt;a href=&quot;https://www.verseoftheday.com/ta/08082026/&quot;&gt; 149:4&lt;/a&gt;&lt;h4&gt;இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்&lt;/h4&gt;இயேசு பரலோகத்தை விட்டு இறங்கி வந்து தன்னை ஊழியஞ்செய்பவராக தாழ்த்தினார்.பிந்தினவர் முந்தினவராகவும், வேலைக்காரன் எல்லாவற்றிலும் சிறந்தவனாகவும் , சிறியவர் மிக முக்கியமானவராகவும் இருக்க அவர் அவ்வாறு செய்தார். இயேசு பாவிகளுக்காகவும் பலவீனர்களுக்காகவும் மரித்தார். இருமாப்புமுள்ளவர்கள் , துரோகிகள் மற்றும் அதிகாரமுள்ளவர்கள் பல நூற்றாண்டுகளாக கிறிஸ்துவின் அழைப்பை  எளிதாக நிராகரித்துள்ளனர். எப்படி இருப்பினும், தாழ்மையுள்ளவர்கள் இயேசுவை இரட்சகராகவும், ஜெயவீரராகவும், ராஜாவாகவும், நண்பராகவும் காண்கிறார்கள். கர்த்தர் அப்படிப்பட்டவர்களில் மகிழ்ச்சியடைகிறார் மற்றும் அவர்களுடன் தனது இரட்சிப்பை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறார்.&lt;h4&gt;என்னுடைய ஜெபம்&lt;/h4&gt;விலையேறப்பெற்ற ஊழியரே, சர்வவல்லமையுள்ள ராஜாவே , மிகுந்த விலையை கொடுத்து எங்களுக்கு ஊழியஞ் செய்ததற்கும், நாங்கள் உம்முடன் வாழ  முடியும் என்பதைக் காட்டியதற்காகவும் நன்றி. என் தேவனாகிய  உம் முன் நான் தலைவணங்கும்போது, முழங்கால்கள் யாவும் முடங்கும்  நாளை நான் எதிர்நோக்குகிறேன். அந்த நாள் வரை, எங்கள் பரபரப்பான மற்றும் வசீகர -மயக்கத்தால் அடிக்கடி தங்களையே மறந்துவிட்டவர்களை ஆசீர்வதிக்க நீர் என்னைப் பயன்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன் . என் ஆண்டவராகிய இயேசுவே, உம்மை அனுப்பியதற்காக எங்கள் தேவனுக்கு மகிமையும் கனமும் என்றென்றும் உண்டாவதாக. இயேசுவின் பரிசுத்த நாமத்தில் என் துதியைச் செலுத்துகிறேன். ஆமென்.&lt;p&gt;&lt;em&gt;இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை  சகோதரர் பில்வேர்  அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள  help@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;</description></item><item><title>இன்றைக்கான வசனம் -  33:22</title><link>https://www.verseoftheday.com/ta/08072026/</link><guid>https://www.verseoftheday.com/ta/08072026/</guid><pubDate>Fri, 07 Aug 2026 00:00:00 -0500</pubDate><description>கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார். 


 &amp;#8212; &lt;a href=&quot;https://www.verseoftheday.com/ta/08072026/&quot;&gt; 33:22&lt;/a&gt;&lt;h4&gt;இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்&lt;/h4&gt;தேவன் நம்முடைய நியாயாதிபதியாக இருப்பதைப் பற்றி நாம் நினைக்கும் போது, ​​​​நாம் யாவரும் நியாயந்தீர்ப்பில் நிற்கவேண்டியதை பற்றி நினைக்கிறோம். தேவன் நம்முடைய நியாயாதிபதியாக இருப்பதன் அர்த்தம், அவருடைய சித்தம், அவருடைய சட்டத்திட்டங்கள் மற்றும் அவருடைய கிருபையின் அடிப்படையில் நம்மை நியாயந்தீர்க்க அவர் இருப்பார் என்று ஏசாயா நமக்கு நினைவூட்டுகிறார். அவர் நம்முடன் இருக்கிறார், நம்மை இரட்சிக்கவே பார்க்கிறார், மாறாக நம்மை தண்டிக்க விரும்பவில்லை . புதிய ஏற்பாட்டு உவமையை பயன்படுத்தி, நாம் நமது நியாயாதிபதி முன் நிற்கும்போது, ​ நாம் பிதாவை பார்க்கிறோம்.&lt;h4&gt;என்னுடைய ஜெபம்&lt;/h4&gt;பரிசுத்தமும், நீதியுமுள்ள நியாயாதிபதியே , என் வாழ்க்கைக்குரிய அநாதி தீர்மானம் , என் எதிர்காலம் மற்றும் என் வாழ்க்கை உம்முடைய கரங்களில் இருக்கிறது என்பதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனக்காக இயேசுவை ஜீவபலியாக கொடுத்ததின் மூலம் நீர் என்மீது கொண்ட அன்பை நான் அறிவேன். உமது கிருபையால் என்னை இரட்சிக்க வேண்டும் என்ற உமது சித்தத்தை நான் அறிவேன். பரிசுத்தத்திற்கான முக்கியத்துவம் உம் குமாரனுடைய ஜீவ பலியினால் பூர்த்தி செய்யப்பட்டது என்பதை நான் அறிவேன். எனவே தேவனே , என் வாழ்க்கையையும், என் ஆத்துமாவையும், என் நித்திய எதிர்காலத்தையும் உம்மிடம் நான் மகிழ்ச்சியோடும் விருப்பத்தோடும் ஒப்புவிக்கிறேன் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.&lt;p&gt;&lt;em&gt;இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை  சகோதரர் பில்வேர்  அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள  help@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;</description></item><item><title>இன்றைக்கான வசனம் -  119:160</title><link>https://www.verseoftheday.com/ta/08062026/</link><guid>https://www.verseoftheday.com/ta/08062026/</guid><pubDate>Thu, 06 Aug 2026 00:00:00 -0500</pubDate><description>உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம். 


 &amp;#8212; &lt;a href=&quot;https://www.verseoftheday.com/ta/08062026/&quot;&gt; 119:160&lt;/a&gt;&lt;h4&gt;இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்&lt;/h4&gt;நல்லொழுக்கம் மற்றும் பரிசுத்தத்திற்கான தேவைகள் தற்காலிகமானவை அல்லது விரைவானவைகளும் அல்ல, ஏனென்றால் அவை நித்தியமான நமது பரிசுத்த தேவனின் தன்மையை பிரதிபலிக்கின்றன. மேலே சொன்ன குணாதிசயங்கள் கலாச்சாரத்தின் விருப்பங்களுடன் சேர்ந்து மாறுவதில்லை, ஆனால் கலாச்சாரத்திலும் , காலங்களிலும், விருப்பங்களிலும் அவைகள் (நல்லொழுக்கமும் , பரிசுத்தமும் ) முழுவதும் மெய்யாக இருக்கின்றன. நாம் தேவனின் விருப்பத்தை நம் காலத்திற்கேற்ப மாற்றியமைக்கலாகாது , ஆனால் அவருடைய சத்தியத்திற்கு ஏற்ப நம் விருப்பங்களை மாற்றியமைப்பதன் மூலமாய் நாம் நம்முடைய காலத்தை மீட்டெடுக்கிறோம்.&lt;h4&gt;என்னுடைய ஜெபம்&lt;/h4&gt;சர்வவல்லமையும் ,நீதியுமுள்ள தேவனே , மனதுருக்கம், பரிசுத்தம் மற்றும் நீதி ஆகியவற்றில் உம்முடைய குணத்தையும் இயல்பையும் என் வாழ்க்கை பிரதிபலிக்கட்டும். நீர் நித்தியக்காலமாய் இருப்பீர் என்பதை நான் அறிவேன், மேலும் நான் அந்த நித்ய வாழ்க்கையை பெற்றுக்கொள்ளத்தக்கதாய் இப்பொழுது என்னை ஒப்புக்கொடுத்து ஜீவிக்க விரும்புகிறேன். இன்றைய துரிதமான சோதனைகளை தாண்டி , இந்த வாழ்கைக்கு பிற்பாடும் உம்மை மகிமைப்படுத்த கூடிய விஷயங்களை கண்டு அவைகளை செய்யவும் எனக்கு ஞானத்தைத் தந்தருளும். இயேசுவின் நாமத்தினாலே . ஆமென்.&lt;p&gt;&lt;em&gt;இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை  சகோதரர் பில்வேர்  அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள  help@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;</description></item><item><title>இன்றைக்கான வசனம் -  119:130</title><link>https://www.verseoftheday.com/ta/08052026/</link><guid>https://www.verseoftheday.com/ta/08052026/</guid><pubDate>Wed, 05 Aug 2026 00:00:00 -0500</pubDate><description>உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். 


 &amp;#8212; &lt;a href=&quot;https://www.verseoftheday.com/ta/08052026/&quot;&gt; 119:130&lt;/a&gt;&lt;h4&gt;இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்&lt;/h4&gt;சில நேரங்களில் மெய்யான பாதையை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் அல்ல; நமது தேடலை எங்கிருந்து தொடங்குவது என்பதை நாம் தெரிந்துக் கொள்ள 
தேவனுடைய வார்த்தைகளை வாசிக்க வேண்டும். மெய்யான வழி மிகவும் அரிதானது. அவைகள் புத்திசாலி, அறிஞர் மற்றும் ஞானிகளுக்கே உரிய உடைமையாகும் ;நாம் அவற்றை தேடினோம் என்றால் , அது நம் யாவருக்கும் மிகவும் தெளிவாக இருக்கும்!&lt;h4&gt;என்னுடைய ஜெபம்&lt;/h4&gt;பரிசுத்த பிதாவே, உம் சித்தத்தை வேதத்திலுள்ள உமது வார்த்தைகளின் மூலமாக தெரியப்படுத்தியதற்காக உமக்கு நன்றி. நான் உமது வார்த்தையைத் திறந்து படிக்கும்போது என்னை ஆசீர்வதியுங்கள். எனது கேள்விகளுக்கான பதிலை மட்டும் நான் கண்டுபிடிக்காமல், உம்மையும் உம்முடைய விலையேறப்பெற்ற விருப்பத்தையும் நான் கண்டுபிடிக்க உதவியருளும் . இயேசுவின் விலையேறபெற்ற நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.&lt;p&gt;&lt;em&gt;இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை  சகோதரர் பில்வேர்  அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள  help@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;</description></item><item><title>இன்றைக்கான வசனம் -  33:2-3</title><link>https://www.verseoftheday.com/ta/08042026/</link><guid>https://www.verseoftheday.com/ta/08042026/</guid><pubDate>Tue, 04 Aug 2026 00:00:00 -0500</pubDate><description>இதைச் செய்கிற கர்த்தருமாய், இதைத் திடப்படுத்தும்படிக்கு இதை உருவேற்படுத்துகிற கர்த்தருமாயிருக்கிற யேகோவா என்னும் நாமமுள்ளவர் சொல்லுகிறது என்னவென்றால்: 
என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். 
 

 &amp;#8212; &lt;a href=&quot;https://www.verseoftheday.com/ta/08042026/&quot;&gt; 33:2-3&lt;/a&gt;&lt;h4&gt;இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்&lt;/h4&gt;கோடிக்கணக்கான நட்சத்திரங்களுள்ள  இப்பிரபஞ்சத்தில், அவற்றை உருவாக்கிய தேவனின் வல்லமையைப் பற்றி சிந்தித்துப் பார்ப்போம் , அவற்றின் பெயர்கள் ஒவ்வொன்றும் தெரியும். அவருக்குத் தெரிந்த அனைத்தும் , நமக்குத் தெரியாது என்பதை நினைத்துப் பார்ப்போம். நம் வரலாற்றுப் புத்தகங்களில் இல்லாத அனைத்தையும் அவர் பார்த்திருப்பதை நினைத்துப் பார்ப்போம். அவர் செய்த மற்றும் செய்யக்கூடிய அனைத்தையும் நினைத்துப் பார்ப்போம். மேலும் , நம்முடைய இருதயத்தின் விஷயங்களைப் பற்றி அவரிடம் பேசவும், அவருடைய கிருபையின் மகத்தான விரிவாக்கத்தையும் நம் மனதின் வரையறுக்கப்பட்ட அறிவையும்   புரிந்துகொள்ள அவர் நம்மை அழைக்கிறார்,

.&lt;h4&gt;என்னுடைய ஜெபம்&lt;/h4&gt;சர்வ வல்லமையுள்ள தேவனே , நான் அறியாத பல விஷயங்கள் உள்ளன. என் உலகில் என்னால் தொடர முடியாத பல விஷயங்கள் உள்ளன. உம்மைப் பற்றி நான் தெரிந்து கொள்ள ஏங்குகின்ற பல விஷயங்கள் உள்ளன, ஆனால் என்னால் தொடர்ந்து புரிந்து கொள்ள  முடியவில்லை. தயவு செய்து, அன்பான பிதாவே , உம்முடைய  தாக்கத்தை அதிகமாக எனக்குக் கொடுங்கள்: உம்மைப் பற்றி மேலும் அறிய எனக்கு உதவுங்கள், இதனால் நான் தனிப்பட்ட முறையில் உம்மை முழுமையாக அறிந்துகொள்ள முடியும். நீர் எனக்கு அப்பாற்பட்டவர், எனவே நீர் உம்மை வெளிப்படுத்தும் போது என்னுடன் மென்மையாக நடந்து கொள்ளுங்கள். பரலோகத்தில் உம்மை நேருக்கு நேர் தெரிந்துகொள்ள நான் ஆவலுடன் காத்திருக்கிறேன், ஆராய்ந்து அறிய முடியாத மற்றும் சர்வ வல்லமையுள்ள தேவன், என் அப்பா பிதாவானவர். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன் . ஆமென்.&lt;p&gt;&lt;em&gt;இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை  சகோதரர் பில்வேர்  அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள  help@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;</description></item><item><title>இன்றைக்கான வசனம் -  16:7</title><link>https://www.verseoftheday.com/ta/08032026/</link><guid>https://www.verseoftheday.com/ta/08032026/</guid><pubDate>Mon, 03 Aug 2026 00:00:00 -0500</pubDate><description>கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம். நான் இவனைப் புறக்கணித்தேன். மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன். மனுஷன் முகத்தைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். 

 &amp;#8212; &lt;a href=&quot;https://www.verseoftheday.com/ta/08032026/&quot;&gt; 16:7&lt;/a&gt;&lt;h4&gt;இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்&lt;/h4&gt;நீங்கள் ஒருவரை முதல் அபிப்ராயத்தைக் கொண்டு நியாந்தீர்ப்பதினால்,எவ்வளவு நல்ல நண்பர்களை  இழந்திருக்கிறீர்கள் என்று  எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? முதல் அபிப்ராயம் மற்றொரு நபரைப் குறித்து பல விஷயங்களை நமக்கு எப்படிச் சொல்கிறது என்பதில் நான் வியப்படைகிறேன். மனிதர்களின் இருதயங்களில் உண்மையில் என்ன இருக்கிறது என்பதை கர்த்தருடைய நியாயத்தீர்ப்பின் நாளில் வெளிப்படுத்தும் வரை நாம் உண்மையில் அவர்களை சரியாக மதிப்பீடு செய்ய முடியாது. அவர்களைப் பற்றி முடிவெடுப்பதற்கு முன் அவர்களின் மனதில் உள்ளதை வெளிப்படுத்த அவர்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?! வெளித்தோற்றத்தை மட்டும் பார்க்க வேண்டாம்!&lt;h4&gt;என்னுடைய ஜெபம்&lt;/h4&gt;பிதாவே , ஒவ்வொரு இருதயத்தையும் நீர் மாத்திரமே அறிவீர். மற்றவர்களைப் பற்றிய  கருத்தை புரிந்துகொள்ளும் வரை அவர்களிடம் பொறுமையாக இருக்க எனக்கு உதவியருளும் . இயேசுவைப் போல அவர்களைப் பார்க்கும்படியாய் எனக்கு கண்களைத் தாரும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.&lt;p&gt;&lt;em&gt;இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை  சகோதரர் பில்வேர்  அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள  help@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;</description></item><item><title>இன்றைக்கான வசனம் -  -1:22</title><link>https://www.verseoftheday.com/ta/08022026/</link><guid>https://www.verseoftheday.com/ta/08022026/</guid><pubDate>Sun, 02 Aug 2026 00:00:00 -0500</pubDate><description>அல்லாமலும் நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்தரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். 


 &amp;#8212; &lt;a href=&quot;https://www.verseoftheday.com/ta/08022026/&quot;&gt; -1:22&lt;/a&gt;&lt;h4&gt;இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்&lt;/h4&gt;நமக்கு தெரிந்தவை  மற்றும் நாம் நம்பும் விஷயங்கள் அனைத்தும் நம் அன்றாட வாழ்க்கையில் நடைமுறை படுத்தவில்லையென்றால், அவை அனைத்தும் முக்கியமாய் தோன்றாது . பரிசுத்தமான, எளிமையான அனுதின வாழ்க்கையில் விசுவாசமில்லாமல் வாழ்ந்தால்  அவை விசுவாசமே அல்ல; அது ஒரு வெளிப்புற வேஷமாகும் . அவரிடமிருந்து நாம் கற்றுக்கொண்டதை கிரியையிலே நடப்பிக்கிறவர்களாய் இருக்க வேண்டும் என்று இயேசு சொன்னது போல, அவருடைய சகோதரராகிய யாக்கோபும் அதை நமக்கு நினைப்பூட்டுகிறார்: தேவனுடைய  வார்த்தையின் சத்தியத்தை நாம் கற்றுக்கொண்டால், நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: அவைகளை நம்முடைய வாழ்க்கையில் நடைமுறை படுத்த வேண்டும் !&lt;h4&gt;என்னுடைய ஜெபம்&lt;/h4&gt;பரிசுத்த தேவனே, இன்று உமது சித்தம் மற்றும் உமது சத்தியம் என்று அறிந்துக்கொண்டதை  நடைமுறைப்படுத்த எனக்கு உதவுங்கள். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.&lt;p&gt;&lt;em&gt;இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை  சகோதரர் பில்வேர்  அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள  help@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;</description></item>  </channel>
</rss>
