இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒருவர் தேவனின் பாதையை விட்டுத் தப்பிப் போனால் அவர்களின் கலகத்தை அற்பமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். காணாமற்போனவர்களைத் தேடி இரட்சிக்க வந்த நம் இரட்சகராகிய இயேசுவின் ஊழியத்தைத் தொடரும் மகத்தான ஆசீர்வாதத்தை தேவன் நமக்குத் தந்திருக்கிறார் (மாற்கு 10:45; லூக்கா 10:10). வழி தவறியவர்கள் இரட்சகரிடம் வீடு திரும்பவும், தொலைந்து போனவர்களைக் கண்டுபிடித்து அவர்களை மீட்பரிடம் திருப்பி அனுப்பவும் இயேசு நம்மை அழைக்கிறார் (மத்தேயு 18:10-14; லூக்கா 15:1-32).

என்னுடைய ஜெபம்

கிருபையுள்ள பிதாவே , உமக்கெதிராக கலகம் செய்து கொண்டிருக்கும் நான் நேசிப்பவர்களுடன் தயவுசெய்து இருங்கள். அவர்களை உம் நித்திய வீட்டிற்கு அழைத்து வரவும், உம் கிருபை , இரக்கம் மற்றும் மன்னிப்பைக் கண்டறியவும் அவர்களுக்கு உதவிச் செய்யும். உம் மறுசீரமைப்பின் முகவராக என்னைப் பயன்படுத்தும். இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து