இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் பூமிக்குரியவர்கள் . ஆம், நாம் அதை விட அதிக விசேஷித்தவர்கள் ஆனால் சில நேரங்களில், நம் வாழ்வில் இந்த தருணத்தில் நமது பூமிக்குரிய ஜீவியத்தை பற்றி நினைவுப் படுத்த வேண்டும்! காலத்திற்கு முன்னே , காலத்தை கடந்து அல்லது காலங்களுக்கு மேலே இருப்பதை மெய்யாகவே நம்மால் புரிந்து கொள்ள முடியாது. நாம் அறிந்தபடி, காலங்கள் உருவாகுவதற்கு முன்பே, தேவனானவர் இருந்தார் - அவர் தன்னை "நானே " என்று வெளிப்படுத்தினார், இருந்தவர், இருப்பவர் மற்றும் வரப்போகிறவர். நாம் வாழ்வதற்கு அடிப்படையான காரியங்கள் ஒரு சீராய் இப்பிரபஞ்சம் இருப்பதற்கு முன்பு, தேவன் "நானே" - கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் ஒரே நேரத்தில் இருப்பவர் ! நமக்காக சிறுஷ்டிக்கப்பட்ட உலகம் மற்றும் காலங்களும் மற்றும் வேலைகளும் உருவாகும் முன்னும், அதற்கு அப்பாலும், அவர் இருந்தார். இதை நாம் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது. அதனால்தான் ஒவ்வொரு புதிய தொடக்கமும் - அது ஒரு நாளாக இருந்தாலும், ஒரு வாரமாக இருந்தாலும், ஒரு வருடமாக இருந்தாலும் அல்லது ஒரு நூற்றாண்டாக இருந்தாலும் - தேவனிடம் இருந்து தொடங்க வேண்டும். அவர் மட்டுமே தொடக்கத்தின் மையமாக இருப்பவர் , ஒவ்வொரு புதிய தொடக்கத்திலும் இருப்பவர் "நானே ".

Thoughts on Today's Verse...

We are creatures of the earth. Yes, we are much more than that, but occasionally, we must be reminded of our earth-bound existence at this time in our lives! We can't truly understand existence before, beyond, or above time. Yet before the beginning of time, as we know it, God existed — he has revealed himself as "I Am," the one who was, who is, and who is to come. Before there was an ordered universe to provide the basis of our existence, God was "I Am" — existing in the past, present, and future simultaneously! He existed before, beyond, and without our created universe and the limitations of space and time. We can't truly comprehend this in its entirety. That's why every new beginning — a day, a week, a year, or a millennium — should begin with God. He alone is the ultimate Genesis, the "I Am" present at every new beginning.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள சிருஷ்டிகரும், பிரபஞ்சத்தின் தேவனுமான, உம்முடைய ஒப்பற்ற வல்லமை மற்றும் புரிந்துகொள்ள முடியாத மகிமைக்காக நான் உம்மைப் போற்றுகிறேன். இந்த புதிய ஆண்டை நான் தொடங்கும் போது, ​​எனது எதிர்காலம் உமது சித்தத்திலும், கிருபையிலும், இரட்சிப்பிலும் தங்கியுள்ளது என்பதை நான் அறிவேன். இந்தப் புதிய எதிர்காலத்தை நோக்கி நான் பயணிக்கும்போது தயவுசெய்து என்னுடனே வாரும் . இன்றும், இந்த ஆண்டும், இன்னுமாய் நீர் எனக்கு பூமிக்குரிய வாழ்க்கையைத் கொடுக்கும் நாட்கள் வரையில் என்னில் மகிமைப்படும்படி கேட்கிறேன் . இயேசுவின் நாமத்தினாலே தாழ்மையுடன் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Almighty Creator and God of the universe, I praise you for your incomparable power and incomprehensible glory. As I begin this new year, I know my future rests in your will, grace, and salvation. Please go with me as I journey toward this new future. Please be glorified in how I live my life today, this year, and for as long as you give me earthly life. In Jesus' name, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of ஆதியாகமம்-Genesis - 1:1

கருத்து