இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

காயமடைந்தவர்களால் நிறைந்த ஆழமான உடைந்த உலகின் ஒரு அங்கமாக நாம் இருக்கிறோம். நம்மைச் சுற்றியுள்ளவர்கள் - அல்லது உள்ளான மனுஷன் - பாடுகளையும், தாங்க முடியாத வேதனையையும் அனுபவிக்கும் நேரங்களில் , அந்த சூழ்நிலைகளை மாற்றவோ அல்லது துன்பத்தைத் தணிக்கவோ முடியாத வேளைகளில் நாம் எளிதில் சோர்ந்து போகிறோம் . அவ்வேளைகளில் உதவிச் செய்யவோ அல்லது நிரந்தர தீர்வுக்கொண்டு வரவோ நமக்கு எந்த பெலனும் ஞானமும் இல்லை என்பதை நாம் உணர்கிறோம். இருப்பினும், விசுவாசிகளாக , நாம் தேவனின் உதவியை எப்பொழுதும் தேடலாம் ! இஸ்ரவேலின் உடன்படிக்கையின் தேவனாகிய கர்த்தர், தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றியவர், தம்முடைய மக்களைப் பாதுகாத்து, கடந்த காலத்தில் தம்முடைய ஜனங்களுக்கு மேசியாவை கொடுத்தவர் , இன்று நமக்காகவும் , நாம் யாருக்காக ஜெபிக்கிறோமோ அவர்களுக்காகவும் உறுதுணையாக நிற்கிற தேவன் அவரே . நிச்சயமாக, தேவனானவர் நம்மை பாதுகாக்க அல்லது நம்மை மீட்க காண்கிறவராகவோ , கேட்பவராகவோ அல்லது கவனிக்கிறவராகவோ இல்லை என்பதுபோல தோன்றும் தருணங்கள் அநேகம் உள்ளன. அத்தருணங்களில், நாம் பயப்படுவதில்லை , சந்தேகப்படுகிறதில்லை மற்றும் கோபமாயிருக்கிறதில்லை என்பது போல நடிக்கிறோம் . அப்படியல்ல ! நாம் நம் ஆண்டவரிடம் நேர்மையாக, வெளிப்படையாக கேட்க வேண்டும், மன்றாட வேண்டும்.. அவர் கடந்த காலத்தில் தனது மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு,இரட்சித்து , தலையிட்டு, விடுவித்துள்ளார். நம்முடைய கர்த்தராகிய தேவனை, அதே தேவனை, நமக்காகவும், நம் நாளில் நாம் நேசிக்கிறவர்களுக்காகவும் அவருடைய வேலையைச் செய்யும்படி அழைப்போம் . நாம் ஜெபம் செய்வோம் :கர்த்தாவே, எழுந்தருளும்; தேவனே உம்முடைய கையை உயர்த்தும்; ஏழைகளை மறவாதேயும்.

Thoughts on Today's Verse...

We are part of a profoundly broken world filled with wounded people. On days when a person around us — or the person inside us — suffers pain and unbearable anguish, we can easily be frustrated by our inability to change the circumstances or mitigate the suffering. We realize we have no power to help or bring lasting relief. However, as believers, we can seek the help of God! The Lord, the covenant God of Israel, who kept his promises, preserved his people, and produced his Messiah in the past, is the God who stands by us and those for whom we intercede today. Sure, there are moments when God seems not to be watching, listening, or intervening to provide care or deliverance. So, do we "keep a stiff upper lip," "suck it up and try harder," pretending we don't have fear, doubts, and anger? No! We honestly cry out to our Lord. He has redeemed, saved, intervened, and delivered his people in the past. We call on our Lord God, the same God, to do his work for us and those we love in our day. We pray: "Arise, Lord! Lift up your hand, O God. Do not forget the helpless."

என்னுடைய ஜெபம்

நம்பிக்கையின் தேவனே , எங்கள் இருண்ட மற்றும் அச்சுறுத்தும் நாட்களில் எங்களிடமிருந்து வெகு தூரமாய் இருக்க வேண்டாம். தயவுசெய்து வாழ்க்கையின் மகிழ்ச்சியையும் நல்ல காரியங்களுக்கான நம்பிக்கையையும் மீட்டெடுத்தருளும். தயவு செய்து எங்கள் வலி மற்றும் வேதனையின் போது எங்களுக்கு ஆறுதல் செய்யும் . எங்கள் நேரம், குடும்பங்கள், கலாச்சாரம், சபைகள் மற்றும் எங்களுக்கு மனந்திரும்புதலையும் புதுப்பிப்பையும் கொண்டு வர உம்முடைய வல்லமையுள்ள கரங்களை உயர்த்தியருளும் . உம் கிருபை மற்றும் இரக்கத்தால் , தயவுசெய்து சுகத்தையும் மீட்பையும் கொண்டு வாரும் . இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

God of hope, do not be far from us in our dark and menacing days. Please restore the joy of life and the hope for good things. Please give us comfort in our times of pain and anguish. Lift up your hand and act to bring repentance and renewal to our time, families, culture, congregations, and us. Out of your grace and mercy, please bring your healing and deliverance. In Jesus' name, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of  சங்கீதம் 10:12

கருத்து