இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"கற்றுக்கொடுக்கும்படி ... புத்திச்சொல்லு !" இயேசுவின் குடும்பத்திலே தேவனுக்கு பயந்து பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிற உண்மையுள்ள ஸ்திரீகள் நமக்குத் தேவை. கிறிஸ்துவைப் போன்ற குணாதிசயங்கள் மூலமாக நம் அனுதின வாழ்வில் தேவனுக்கு பயந்து எப்படி கனம் பண்ண வேண்டும் என்பதை அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நடப்பிக்க வேண்டும். நமது வரும் தலைமுறைக்கு "நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் " அவர்களுக்கு நம்முடைய ஊக்கமளிக்கும் வார்த்தைகள் தேவை. அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிற ஸ்திரீகளின் வாழ்க்கைமுறையை பார்த்து நாம் கனம்பண்ணுகிறது போல, அப்படிப்பட்ட ஸ்திரீகளும் முன்னே வந்து மற்றவர்களை , ஆவிக்குரிய வாழ்கையின் பாதையில் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று நாம் ஜெபிக்க வேண்டும். அத்தகைய ஸ்திரீகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் நம்மைப் பொறுத்தவரை, அவர்களுக்காக நாம் தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் மற்றும் இயேசுவின் குடும்பத்தில் உள்ள மற்ற அனைவரும் அவர்களை முன்மாதிரியாக நோக்கி வாழ வேண்டும்!

Thoughts on Today's Verse...

"Teach... to teach!" We need faithful women who reverence God in Jesus' family. We need them to demonstrate how to reverence God in our daily lives through their Christ-like character. They need our encouragement "to teach what is good" for our coming generations. We should pray that such women step forward and mentor others in godliness as we respect their reverent lifestyles. As for those of us such women have blessed, we must thank God for them and hold them up as examples to others in Jesus' family!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் நீதியுமுள்ள பிதாவே , ஆவிக்குரிய குணமும்,உண்மையுள்ள சேவையும் கொண்ட ஸ்திரீகளை சபையிலே எழுப்புங்கள். உம்முடைய மக்களுக்கு அன்பான முன்மாதிரிகளாக அவர்களை வைத்திரும். அவர்களின் பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிற வாழ்க்கையையும், இருதயங்களையும் பார்க்கும்படி எங்கள் கண்களைத் திறந்தருளும் . எங்கள் வேதாகமத்தில் உள்ள கிறிஸ்துவின் குணாதிசயங்களை கொண்ட அநேக ஆவிக்குரிய ஸ்திரீகளுக்காக (தெபோராள் , எஸ்தர், மரியாள் , தொற்காள் மற்றும் பிரிஸ்கில்லா போன்ற ஸ்திரீகள்) உமக்கு நன்றி, அவர்கள் நன்மைக்காக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர் . என் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, விசுவாசம்,நம்பிக்கை மற்றும் அன்பைப் பற்றி எனக்கு நிறைய கற்றுக்கொடுத்த அந்த ஆவிக்குரிய ஸ்திரீகளுக்காக நான் உமக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இயேசுவின் நல்ல நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Holy and righteous Father, please raise up women of godly character and faithful service. Please give us the eyes to see their reverent lives and hearts that hold them as dear examples for your people. Thank you for the many godly women in our Christian heritage who have had tremendous impact for good — women like Deborah, Esther, Mary, Dorcas, and Priscilla. I also want to thank you for those godly women who have made such a tremendous difference in my life and taught me so much about faith, hope, and love. In the name of Jesus, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of  தீத்து-Titus 2 : 3,5

கருத்து