இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நமது மகிழ்ச்சிக்கு அடிப்படை என்ன? இது நமது வெளிப்புற சூழ்நிலைகள் என்றால், நாம் அனைவரும் பிரச்சனையில் இருக்கிறோம், ஏனெனில் விரைவில் அல்லது பின்னர், இவை மிகவும் நன்றாக இருக்காது. வாழ்க்கையின் சூழ்நிலைகளுக்கேற்ப வாழ்வதற்கான ரகசியத்தை தான் கற்றுக்கொண்டதாக பவுல் கூறினார். அந்த ரகசியம் இயேசு கிறிஸ்துவே. நம்முடைய பிரச்சனைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் அவை நிரந்தரமானவை அல்ல என்று இயேசு உறுதியளித்தார். வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், விடாமுயற்சியுடன் இருப்பதற்கு இயேசு அவருக்கு பலத்தைக் கொடுப்பார். உங்களுக்கும் எனக்கும் இயேசு இதைச் செய்வார் என்று பவுல் உறுதியாக இருக்கிறார்!

என்னுடைய ஜெபம்

மகிமையும் வல்லமையும் கொண்ட தேவனே , வேதாகமத்தில் உம்முடைய மாபெரும் வல்லமையின் நிகழ்வுகளுக்கு நன்றி. என் பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது அவை எனக்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் தருகின்றன. இயேசு என்னை விடுவிப்பார், தாங்குவார், இன்று என் கஷ்டங்களில் என்னைத் ஏந்துவார் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் உம்மிடம் திரும்பாத அந்த நேரங்களுக்காகவும் , என் போராட்டங்களைப் பற்றி உம்மிடம் நேர்மையாக வெளிப்படையாக பேசாததிற்காகவும் தயவுசெய்து என்னை மன்னியுங்கள் . கர்த்தாவே, எனக்கு இன்று கிறிஸ்துவின் பலமும், ஆறுதலும், பிரசன்னமும் தேவை. என் இரட்சகராகிய இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து