இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஆம், நமக்கு நித்திய ஜீவன் இருப்பதை நாம் அறிந்து கொள்ளலாம்! குறைவாக எண்ணாதீர்கள்!! விசுவாசம் மிகவும் முக்கியமானது, தேவன் தம்முடைய குமாரனை மரித்து உயிர்த்தெழ அனுப்பினார், எனவே இயேசுவோடான நித்திய வாழ்வு நமது இலக்கு, நமது பயணம் மட்டுமல்ல என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். அந்த நித்திய ஜீவன் ஆரம்பித்து இப்போது அனுபவிக்கும் போது (யோவான் 5:24), கர்த்தராகிய இயேசுவுடனான நமது மகிமையான மற்றும் நித்திய எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதற்கான ஒரு குறிப்பு, முன்னறிவிப்பு மட்டுமே நாம் இங்கே அனுபவிப்பது.

என்னுடைய ஜெபம்

பரலோகத் தகப்பனே, உமது இரட்சிப்பின் திட்டத்திற்கும், அதை நிறைவேற்ற நீர் செலுத்திய விலைக்கும் நன்றி. உம் பிள்ளையாக உம்முடன் என் நித்திய எதிர்காலத்தில் இப்போது எனக்கு நம்பிக்கை அளித்ததற்கு நன்றி. பரலோகம் , விசுவாசம் மற்றும் எப்போதும் அடியேன் உம்முடன் இருக்கப் போவதான நித்திய வீட்டிற்கு நன்றி. எல்லா மகிமையும் கனமும் உனக்கே உரியது , கர்த்தராகிய இயேசுவே, உமது நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து