இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மீண்டும் தொடங்குவதை விட இது சிறந்தது! கிறிஸ்தவர்களாகிய நாம் புதிய மற்றும் பொலிவடைந்த துவக்கத்தைப் பெறுகிறோம். தேவன் நம்மை மன்னித்து, குணமாக்கி , மீட்டு, நம்மைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல், நம்மை ஒரு புதிய சிருஷ்டிப்பாகவும் ஆக்கினார்! ஒவ்வொரு முறையும் நாம் அவரிடம் வரும்போது, ​​ஒவ்வொரு நாளும் அவருக்குச் ஊழியம் செய்ய நம்மையே அர்ப்பணித்துக் கொள்கிறோம், ஒவ்வொரு புதிய வருடத்தை அவருக்காக வழங்குகிறோம், ஒரு புதிய துவக்கத்தையும், ஒரு புதிய உலகத்தையும் பெற்றுக்கொள்ளுகிறோம் . எனவே, இந்தப் புதிய ஆண்டைத் துவங்கும்போது, ​​எல்லா அநியாயங்களிலிருந்தும் நம்மை பரிசுத்தப்படுத்தி, நம் வாழ்வின் தலையாகிய பொறுப்பை ஏற்கும்படி அவரிடம் வேண்டிக் கொண்டு, நம்மையே அவருக்கு ஒப்புவிப்பதன் மூலம் தொடங்குவோம்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள மற்றும் பரிசுத்தமுள்ள தேவனே , இந்த வருடத்தில் அடியேன் தேர்ந்துதெடுக்கும் காரியங்களில் , நான் உற்சாகப்படுத்தும் நபர்கள், நான் பேசும் வார்த்தைகள் மற்றும் என்னுடைய எல்லா செயல்கள் ஆகியவற்றில் நான் உம்மை மாத்திரமே மகிமைப்படுத்த விரும்புகிறேன். அடியேன் இந்த வருஷத்தின் முதல் நாளுக்காக மாத்திரம் வாக்கு கொடுக்கவில்லை என்பதை நான் அறிவேன், ஆகிலும் அடியேன் வாழும் ஒவ்வொரு நாளும் உம்முடைய மகிமைக்காகவும் கனத்துக்காகவும், புகழ்ச்சிக்காகவும் என்னுடைய வாழ்க்கை இருக்கும்படி விரும்புகிறேன். என் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து