இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் எல்லோரும் மறுபடியும் முயற்சி செய்ய அல்லது நம்மை சீர்படுத்து ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டவர்கள். தேவன் இவைகளை விட மேலாக நம்மை மாற்றுகிறார் ! அவர் நம்மை மீண்டும் புதிய சிருஷ்டியாக மாற்ற விரும்புகிறார். "புதிய சிருஷ்டிப்பின் தேவன் " என்பதால், அவர் நம்மைப் புதிய சிருஷ்டியாக ஜெநிப்பிக்க முடியும். மன்னிப்பு, சுத்திகரிப்பு இவைகளுக்கு மேலாக நம்மை கிறிஸ்து இயேசுவின் மூலமாய் பரிசுத்தமாக்கியிருக்கிறார். இந்த புத்தாண்டின் மூலமாய் வரும் வாய்ப்பை பயன்படுத்தி புதிதும், ஜீவனுமுள்ள ஒரு பரிசுத்த வாழ்க்கை வாழும்படி முற்படுவோம்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்த பிதாவாகிய தேவனே , புத்தாண்டு மற்றும் புதிய தொடக்கத்திற்காக உமக்கு நன்றி. இந்த வரவிருக்கும் புதிய ஆண்டில் நேர்மையுடனும் உண்மையுடனும் உமக்கு ஊழியம் செய்ய எனக்கு ஞானத்தையும் பலத்தையும் கொடுத்தருளும் . நான் என்னையும், எனது திட்டங்களையும், எனது எதிர்காலத்தையும் உம்மண்டை வழங்கும்போது உம்முடைய சித்தம் என் வாழ்வில் செய்யப்பட வேண்டும் என்று விண்ணப்பிக்கிறேன் . எனக்காக பரிந்து பேசுகிறவரும், என் ஆண்டவருமாகிய இயேசுவின் மூலமாய் அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து