இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அவர்கள் சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், தேவனின் நிலையான பிரசன்னம் சிறிது திகைப்பூட்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் நான் எங்கு சென்றாலும், நான் கருவில் உருவானது முதல் நான் மரிக்கும் நாள் வரை, தேவன் எப்போதும் இருக்கிறார் என்பதை அறிவதில் எனக்கு மிகுந்த ஆறுதல் கிடைக்கிறது. அவர் என்னை வழிநடத்தவும் என்னை ஆதரிக்கவும் இருக்கிறார். நான் இருக்கக் கூடாத இடங்களில் இருந்தாலும், நான் செய்யக்கூடாத விஷயங்களைச் செய்து கொண்டிருந்தாலும், அவர் அங்கேயே இருக்கிறார். நான் என் பாவத்திலிருந்து மனம் மாறி அவரிடம் திரும்பி அவருடைய கிருபையைப் பெற முடியும். நான் என்னுடைய தேவையில் அவரிடமாய் சாய்ந்து அவருடைய பெலத்தைப் பெற முடியும். நான் அவரிடம் திரும்பி, நான் தனியாக இல்லை என்பதை அறிய முடியும்.

என்னுடைய ஜெபம்

பிதாவே,என்னை நேசித்ததற்கும் என்னை தனிப்பட்ட முறையில் அறிந்ததற்கும் நன்றி . நீர் இல்லாமல் நான் ஒரு நாளையும் சந்திக்க வேண்டியதில்லை என்ற உறுதிக்கு நன்றி. என் துக்கங்களை நான் தனியாக எதிர்கொள்ள மாட்டேன் என்று ஆறுதல் சொன்னதற்கு நன்றி. நான் பெலனற்றவனாக இருந்த போது என்னை தாங்கும் பலமாக இருப்பதற்கு நன்றி. நாளை விடியும்போது, ​​இரவில் என்ன நடந்தாலும் நான் உம்முடன் இருப்பேன் என்பதற்கு நன்றி. இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து