இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்கள் இரட்சிப்பு மற்றும் மீட்பை குறித்து உங்களிடம் பரலோக தேவ தூதன் கேட்கும் கேள்வி, உங்களுக்கும் அவருக்கும் இடையே நடந்த உரையாடலை கற்பனை செய்து பாருங்கள். தேவ தூதன் : " அது எவ்வளவு விலை ?" நீங்கள்: "என்ன? இந்த பழைய காரியமா ? இந்த எலும்புகள் மற்றும் இரத்தம் மற்றும் மூளை அடங்கிய சரீரமா ? இந்த இருதயம் மற்றும் மனம் மற்றும் உள்ளத்தில் வாழும் ஆத்துமாவா ?" தேவ தூதன் : "ஆமாம்! இது என்ன விலை ?" நீங்கள்: "பரலோகத்தின் மிகப்பெரிய ஈவாகிய இயேசுவை விலையாக கொடுத்து என்னை மீட்டு, என்னை முழுமையாக மாற்றினார் !" அன்பான நண்பரே, இயேசுவுக்குள்ளாய் , உங்களையும் என்னையும் தேவன் அவ்வளவு விலையேற பெற்றவர்கள் என்று நினைக்கிறார் . எண்ணி முடியாதது! உங்கள் மீதும் என் மீதும் அவர் கொண்டிருந்த அற்புதமான மற்றும் கிருபையான அன்பின் காரணமாக தேவன், அவருக்கு மாபெரிதான விலை ஒன்றை கொடுத்து எங்களை மீட்டார்.

என்னுடைய ஜெபம்

பிதாவே , நீர் என்னை மிகவும் உயர்வாக கணித்து வைத்திருக்கிறீர்கள் என்பதை அறிந்து நான் திகைத்து, பணிந்து, மெய்சிலிர்த்துப் போனேன். அடியேன் பாவத்தால் உழன்று என்னை நானே இழிவுபடுத்தியதற்காகவும், அற்பமான காரியங்களில் வாழ்ந்து அதிலே நிலைத்து கொண்டிருப்பதற்காகவும், பயனற்ற விஷயங்களை நோக்கி எப்பொழுதும் ஓடிக் கொண்டிருப்பதற்காகவும் என்னை மன்னித்தருளும் . என்னை மிகவும் நேசித்ததற்காக உமக்கு நன்றி. உமது பரிசுத்த ஆவியின் வல்லமையால், நீர் என்னில் காணும் மதிப்பிற்கு தக்கதாக வாழ எனக்கு உதவிச் செய்யும் . என்னை மீட்டுக் கொண்ட இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து