இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சோதனை ... நாம் யாவரும் சோதிக்கப்பட்டோம் . சாத்தானின் வெள்ளி பூசிய தோட்டா நமக்காகவே தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. "யாரும் அதை அறியார்கள் ; அது யாரையும் காயப்படுத்தாது!"சிலரின் புரிந்துகொள்ள முடியாத பேச்சின் தொனி நமது சொந்த கிசுகிசுக்கள் போல் தோன்றுகிறது . அந்த இரண்டு கூற்றுகளும் மெய்யாக இருந்தாலும், உண்மையில் அப்படி ஒருபோதும் இல்லை, அது முக்கியமானதாக இருக்கும், ஏனென்றால் நமக்குள் நாம் அறிந்ததில் ஏதோ தவறு இருப்பதாக நமக்குத் புரிகிறது ." இந்த சோதனையில் நாம் தனியாக இல்லை" என்ற இந்த வாக்கியம் நம்முடைய பாதுகாப்பை நினைப்பூட்டுகிறது - மற்றவர்கள் அதை எதிர்கொண்டு அதை ஜெயித்தார்கள் , எனவே நாமும் கூட தேவனுடைய உதவியாலும் அவருடைய பரிசுத்த ஆவியின் வல்லமையாலும் வெற்றிசிறக்க முடியும்.

என்னுடைய ஜெபம்

மகா பரிசுத்தமுள்ள பிதாவே, என் இருதயத்தை சோதனையிலிருந்தும், என் வாழ்க்கையை பாவத்திலிருந்தும் காத்தருளும். முழு மனதுடன் உமக்கு ஊழியஞ் செய்ய விரும்புகிறேன். என்னுடைய கடந்தகால பாவத்தை மன்னித்து, உமது கிருபையினாலும், உமது வார்த்தையினாலும், சாத்தான் என்னை உம்மிடத்திலிருந்து பிரிக்கப் பயன்படுத்தும் சோதனைகளை நான் முறியடிக்க உமது பரிசுத்த ஆவியால் என்னைப் பலப்படுத்துங்கள். என் பாதுகாவலர் மற்றும் மீட்பர் மூலம் நான் ஜெபம் செய்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து