இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எல்லாம் முடிந்தது என்று சொன்னாலும் கூட , ​​​​நாம் உண்மையில் அவைகளை முழுமையாக நம்ப முடியாது . நம்பிக்கை துரோகம் செய்த ஒரு நண்பரால் நம்மில் பெரும்பாலோர் ஒரு காலத்தில் அல்லது சில நேரத்தில் காயப்படுத்தப்பட்டிருக்கிறோம். உலகப் பொருளாதாரம் நிலையற்றது, ஆகவே வெகுசில நாட்களில் விஷயங்கள் கசப்பாக மாறக்கூடும். ஒவ்வொரு மணிநேரமும் வானிலை மாறுபடுகிறது, அவைகள் மாறிக்கொண்டே இருக்கிறது . ஆனால் நமது மாற்றம் நிறைந்த உலகில், நமது மனவேதனை மற்றும் ஏமாற்றத்தில், ஒன்று மாத்திரமே நிலையானது . நாம் தேவன் மீது நம்பிக்கை கொண்டிருப்பது . மாற்றத்திற்கு நாம் பயப்பட வேண்டியதில்லை. பலமான காற்றையும் புயல்களையும் தாங்கிப்பிடிக்கும் நங்கூரம் அவரே . எங்கள் மோசமான போர்களில் அவரே எங்கள் அரணான பெலன் . அவருடைய வார்த்தையும் அவருடைய வாக்குத்தத்தங்களும் நமக்கான நன்மைகளை குறித்தே பேசுகின்றன. நாம் பயப்பட வேண்டியதில்லை, நாம் நம்முடைய நம்பிக்கையை அவர் மீது வைக்கலாம்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள பிதாவே, என் மீட்பவரும், என் பெலனுமானவரே , உமது உதவியாலும், பிரசன்னத்தாலும் நான் வரும் நாட்களை குறித்து அஞ்சமாட்டேன். வரலாற்றின் மூலம் உம்முடைய ஜனங்களாகிய இஸ்ரவேல் மக்களை நிலைநிறுத்தியதற்காக உம்மை போற்றுகிறேன். துன்புறுத்தல்கள் மற்றும் சுத்திகரிப்புகள் மூலம் உம் வார்த்தையாகிய வேதவசனங்களைப் பாதுகாத்ததற்காக நான் உம்மை துதிக்கிறேன். நான் உம்மை துதித்து , எந்த ஒரு காரியத்தையும் குறித்து பயப்பட மாட்டேன், ஏனென்றால் என் வாழ்க்கையும் என் எதிர்காலமும் உம்முடைய கரங்களில் இருக்கிறது . என் ஆண்டவராகிய,இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து