இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நான் தேவனை பயத்துடனும் பக்தியுடனும் நோக்கும் போது, ​​அவர் பரிசுத்தமான மற்றும் மகத்துவமுள்ள தேவன் என்பதால், அவருடைய சமூகத்தை எண்ணி நான் பயப்பட வேண்டியதில்லை. இயேசுவானவர் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் காரணமாக, தேவன் என் அப்பா பிதா என்பதை நான் அறிவேன். நான் அவரை கிட்டி சேரவேண்டும் என்று அவர் விரும்புகிறார். இயேசு கிறிஸ்துவை அனுப்பியதன் மூலமாக அவர் தனது இருதயத்தை எனக்குக் காண்பித்துள்ளார். இயேசுவானவர் எனக்காக மரிப்பதன் மூலம் அவர் தனது அன்பை விளங்கச் செய்தார் . அந்த அளவுக்கு அவர் என்மீது அன்பு வைத்திருந்ததால், என்னைக் காப்பாற்றி ஆசீர்வதிக்க வேண்டும் என்பதே அவருடைய சித்தம் என்று என்னால் விசுவாசிக்க முடியும். அவருடைய சமூகத்துக்கோ ,நியாயத்தீர்ப்புக்கோ நான் பயப்பட வேண்டியதில்லை. அவருடைய பிள்ளையாக , அவருடைய அன்பு என் இருதயத்திலிருந்து பயத்தை புறம்பே தள்ளி அதற்கு பதிலாக பூரண அன்பாகிய அவரது நிரந்தர பிரசன்னமாகிய பரிசுத்த ஆவியாலே நிரப்பிற்று .

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் நீதியுமான பிதாவே, இயேசுவில் என்மீது காட்டிய உம் அளவற்ற அன்பிற்கு நன்றி. என் பாவங்களுக்குப் பரிகார பலியை வழங்கியதற்காகவும், என்னை உம்முடைய பரிசுத்த குடும்பத்தில் சுவிகாரபுத்திரராக தத்தெடுத்ததற்காகவும் நான் நன்றி கூறுகிறேன். பிதாவே , தயவுசெய்து என் இருதயத்திலிருந்து எல்லா பயத்தையும் அகற்றி, உம்முடனும் உமக்காகவும், நற்குணத்துடனும், நல்ல நோக்கத்துடன் நம்பிக்கையுடன் நடக்க எனக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து