இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நமக்கு மிகவும் உதவி தேவைப்படும் வேளைகளில, அவர் நம்மோடு இருப்பார் என்றும், நமக்குத் தேவையான வார்த்தைகளைக் கொடுக்க தம்முடைய பரிசுத்த ஆவியானவரை அனுப்புவார் என்றும் இயேசு வாக்களித்திருக்கிறார் . பல நூற்றாண்டுகளாக, இந்த வாக்குத்தத்தம் பாடுகளை சந்திக்கும் மற்றும் ஏளனத்திற்கும் உள்ளான மக்களை தாங்கி வந்திருக்கிறது. அவர்கள் தனித்து விடப்படுவதில்லை என்பதையும், சர்ச்சைக்குரிய மக்களை எதிர்கொள்ள சரியான பதிலைப் பற்றி அவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்பதையும் உணர இது அவர்களுக்கு உதவுகிறது . இதே வாக்குறுதி இன்று கிறிஸ்தவர்களுக்கு அரசாங்கத்தின் துன்புறுத்தலின் கீழ் இருந்தாலும் அல்லது வேலையிடத்தில், பள்ளியில் அல்லது வீட்டில் அவிசுவாசிகளின் விரோதத்தை எதிர்கொண்டாலும் அவர்களை ஆதரிக்கிறது. நமது எதிரிகளை எதிர்கொள்ளும் போது, ​​நாம் தனியாக இல்லை என்பதை அறிவோம்; நம்முடைய இரட்சகர் நம்மோடு செல்கிறார்.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள தேவனே , உமது இரட்சிப்பின் செய்தியை எதிர்ப்பவர்களுடன் நான் பேசும்போது உமது பெலமும் பரிசுத்த ஆவியானவரின் உதவியும் எனக்குத் தேவை. எங்களை எதிர்த்துநிற்க்கும் அந்த முக்கியமான தருணத்தில் மற்றவர்கள் கேட்பது உம்முடைய வார்த்தைகளாக இருக்க வேண்டும், என்னுடையது வார்த்தைகளை அல்ல. எப்போது பேச வேண்டும், என்ன பேச வேண்டும், எப்போது மௌனமாக இருக்க வேண்டும் என்பதை அறிய எனக்கு ஞானத்தை தாரும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து