இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கர்த்தருக்குள் நாம் நேசிக்கிறவர்களுக்காக நாம் செய்யக்கூடிய மிக முக்கியமான காரியங்களில் ஒன்று என்ன? அவர்களுக்காக நாம் ஜெபிக்கலாம். ஆனால் அதற்கும் மேலாக, தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியானவரை கொண்டு அவர்களை வல்லமையினால் பெலப்படுத்தும்படி நாம் ஜெபிக்கலாம். அவரே இயேசுவை மரித்தோலிருந்து எழுப்பினார் (எபே. 1:19). வேண்டிக்கொள்ளுகிற யாவருக்கும் தேவன் தம்முடைய மாபெரும் ஈவாகிய அந்த பரிசுத்த ஆவியானவவரை கொடுக்கிறார் (லூக்கா 11:13). அவருடைய பரிசுத்த ஆவியானவர் மூலமாக உலர்ந்த எலும்புகளை பள்ளத்தாக்கிலே மீண்டும் உயிர்ப்பித்தார் (எசேக்கியேல் 37). அந்த பரிசுத்த ஆவியானவரை கொண்டு , நாம் கர்த்தருக்குள் நேசிப்பவர்களை பெலப்படுத்தும்படி அவரிடம் கேட்டால் அவர் அதை அப்படியே செய்வார் !

என்னுடைய ஜெபம்

வல்லமையும் மகத்துவமுமான தேவனே , கிறிஸ்துவுக்குள் எனக்கு பல சகோதர சகோதரிகள் உள்ளனர், அவர்களுக்கு உமது கிருபையையும் , இரக்கத்தையும் , வல்லமையையும் உமது ஆவியின் மூலமாக அவர்களுடைய வாழ்விலே ஊற்றப்படவேண்டும். சிலர் தங்கள் பாவத்திற்கு தண்டனை பெற வேண்டும். சிலருக்கு அவர்களின் கடினமான பாதைக்கு பெலமும், தைரியமும் தேவை. சிலருக்கு தங்கள் வாழ்வில் வரும் பாவத்தை வெல்ல பெலன் தேவை. உமது பரிசுத்த ஆவியியானவரின் மூலமாய் அவர்களின் உள்ளான மனுஷனை பெலப்படுத்துங்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து