இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நான் ஜெபிக்கும்போது, ​​என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு அல்லது ராஜ்யத்தின் நன்மைக்கு எது சிறந்தது அல்லது மிகவும் பொருத்தமானது என்று எண்ணாமல் , நான் விரும்புவதை தேவன் செய்ய வேண்டும் என்று நான் அடிக்கடி விரும்புகிறேன். தன்னுடைய பெலவீனத்தில் இருந்து விடுபடுவது பற்றி போதுமான அளவு கேட்டதாக தேவன் பவுலிடம் கூறியதை நான் கேட்க விரும்பவில்லை. மாறாக, சோதனையின்போதும் தன்னைத் தாங்குவதற்கு தேவனின் கிருபையும், இரக்கமும் போதுமானது என்பதை பவுல் கற்றுக்கொள்ள வேண்டிதாயிருந்தது. இதே பாடத்தை நான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியும், அது அச்சுறுத்தலாக இருக்கிறது. தேவன் எனக்கு அநேக விஷயங்களை அழகாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் நான் கிறிஸ்துவைப் பின்பற்றுபவன் என்பது எனக்கு நினைவிருக்கிறது. நான் என்னுடைய இரட்சகரைப் போல் ஆக வேண்டுமானால், தேவனின் பதில்கள் குறித்த எனது சொந்த தேவைகளை நான் விட்டுவிட்டு, தனிப்பட்ட செலவைப் பொருட்படுத்தாமல், மற்றவர்களை என் மூலமாக மீட்பதற்கான தேவனின் ஊழியத்தை செய்ய வேண்டும். அப்போதுதான் அவருடைய கிருபை எனக்குப் போதுமானது என்பதை நான் மெய்யாய் அறிந்துக்கொள்ள முடியும்!

என்னுடைய ஜெபம்

பொறுமையும் அன்பும் நிறைந்த நல்மேய்ப்பரே, கடினமான காலங்களில் என் இருதயத்தை மனச்சோர்விலிருந்து காத்தருளும், நல்ல காலங்களில் ஆணவத்திலிருந்து காத்தருளும். நீங்கள் இல்லாமல் எனக்கு நிரந்தரமானது எதுவுமில்லை என்பதை நான் அறிவேன். உமது கிருபையும் வலிமையும் என்னுடன் பகிர்ந்து கொண்டதன் காரணமாக, உம்முடன் நிரந்தரமான, உறுதியான பரலோக நம்பிக்கையை எனக்கு அளித்ததற்காக உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து