இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய ஜனங்களும், தேவனுடைய ஊழியங்களும் தொடர்ந்து போராட்டங்களுக்கு உள்ளாகின்றன. சாத்தான் தன் ராஜ்யம் சூறையாடப்படும்போது அமைதியாக இருக்கமாட்டான். ஆனால், ஊழியத்தின் பாதையில் முன்னணியில் இருப்பவர்கள் தனித்து போராட வேண்டிய அவசியமில்லை. நீங்களும் அவர்களுக்கு உதவலாம். அவர்களுக்காக தேவனிடம் விண்ணப்பம் செய்வதன் மூலமாக நீங்களும் "போராட்டத்தில் பங்குகொள்ளலாம் ". HEARTLIGHT.org மற்றும் VerseoftheDay.com வின் , பாதுகாப்புக்காகவும், பெலனுக்காகவும், ஞானத்திற்காகவும் உங்கள் ஜெபங்களில் எங்களை நினைத்துக்கொள்ளுங்கள் . உங்களுக்குத் தெரிந்த மற்றவர்களுக்கும் இதே போன்ற ஜெபங்கள் தேவை. பணத்தை விட, முதுகில் தட்டி உற்சாகப்படுத்துவதை விட, புகழ் அல்லது வெற்றியை விட, தேவனுடைய ஊழியர்களுக்கும், தேவனுடைய ஊழியத்துக்கும் உங்களுடைய அனுதின ஜெப ஆதரவு தேவையாய் இருக்கிறது .

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள மற்றும் மகத்துவமுள்ள தேவனே , இன்று என் இருதயத்தில் இருக்கும் இந்த ஊழியர்களை ஆசீர்வதித்து, பாதுகாத்து, பெலப்படுத்துங்கள்... ஆண்டவரே, உம் திருச்சபையின் ஊழியங்களையும், ஊழியர்களையும், சுவிசேஷகர்களையும் ஆசீர்வதித்து, அன்பான தேவனே , அடக்குமுறையிலும் துன்புறுத்தலுக்கும் உள்ளான உம் பிள்ளைகளை இயேசுவின் நாமத்தினாலே விடுவித்தருளும் . தேவனே , எல்லா வல்லமையும், கனமும் மகிமையும் உமக்கே உரியது. என்னுடைய ஜெயங்கொள்ளும் ராஜா , எங்களுக்காக சிலுவையில் மரித்த ஆட்டுக்குட்டியானவரின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து