இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனே, என் விசுவாசத்தை பெருகச் செய்யும். என் பெலத்தை பெருகச் செய்யும். என் ஞானத்தை பெருகச் செய்யும். இந்த விஷயங்களுக்காக நாங்கள் தொடர்ந்து ஜெபிக்கிறோம், ஆனால் நம் அன்பை பெருகச் செய்ததற்காக தேவனை நோக்கி கடைசியாக நன்றி சொன்னது எப்போது? நம் சபையை பற்றி கூறுவதை விட உற்சாகமானகாரியம் ஒன்றுமில்லை . "நம் ஒவ்வொருவருக்கும் ஒருவர் மீதுள்ள அன்பு பெருகிக்கொண்டிருக்கிறது !" அவ்வாறு நடப்பிக்க ஜெபம் செய்து செயல்படுவோமாக.

என்னுடைய ஜெபம்

பரிசுத்த தேவனே, உம் அன்பு என்னில் பொங்கி வழியட்டும் , அதனால் நான் ஒவ்வொரு நாளும் சந்திப்பவர்களுடன் அன்பை முழுமையாக பகிர்ந்து கொள்ள முடியும். இந்த அன்பு வளந்து பெருகட்டும், அதனால் மற்றவர்கள் அதன் பலன்களை உடனடியாகப் பார்க்கவும், நீர் என்னுடன் பகிர்ந்து கொண்ட அளவற்ற அன்பிற்கு இது நேரடியான பதில் என்பதை உணரவும். உமது ஆவியின் வல்லமையால் , என் அன்பை பெருகச் செய்யவும் உதவுங்கள்! இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து