இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இராஜ்யத்திற்கு செல்ல, நாம் மற்றவர்களை சிறப்பாக வழி நடத்த வேண்டுமானால், முதலில் நாம் இராஜ்யத்திற்குரியவைகளை , பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும் என்பதை நாம் அடிக்கடி உணரத் தவறுகிறோம். ராஜ்யத்திற்க்கு வழி நடத்துதல் என்பது நடத்துகிறவர்கள் எப்படி வழிநடத்தினார்கள் என்பதற்கு தேவனிடம் பதிலளிக்க வேண்டும் என்பதாகும். ராஜ்யத்தின் குடிமக்கள் என்பது நம்மை நடத்துகிறவர்களுக்கு நாம் எப்படிக் கீழ்ப்படிந்தோம், ஆசீர்வதித்தோம் என்பதற்கு நாமே பொறுப்பாவோம். உங்கள் சபை நடத்துகிறவர்களிடம் உங்கள் அன்பு, கனம் மற்றும் ஆதரவைக் காட்ட நீங்கள் என்ன செய்தீர்கள்?

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள ராஜவே , எல்லா அதிகாரமும் மாட்சிமையும் உமக்கே உரியது . நீர் ஒருவரே அதிகாரத்திற்கும், ஆட்சி செய்யும் உரிமைக்கும் தகுதியானவர். தயவு செய்து திருச்சபையில் எங்களை வழி நடத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள், அதினால் அவர்கள் கிறிஸ்துவை சேவிப்பதன் மூலமும் பின்பற்றுவதன் மூலமும் அப்படி செய்யலாம் . கிறிஸ்துவை உயர்த்தி, உம் ராஜ்யத்தில் உள்ள நடத்துகிறவர்களை ஆசீர்வதிக்கும் வழிகளில் அவர்களின் வழி நடத்துதலை பின்பற்ற எனக்கு அதிகாரம் கொடுங்கள். என் வாழ்க்கை அவர்களுக்கு ஒருபோதும் பாரமாகவோ அல்லது உமக்கு துக்கமாகவோ இருக்கக்கூடாது. இயேசுவின் நாமத்தினாலே , நான் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து