இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உண்மையான செய்தி - ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துங்கள். நீடித்த செய்தி - ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துங்கள். மிகவும் நம்பிக்கைக்குரிய செய்தி - ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துங்கள். மிகவும் கடினமான செய்தி - ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துங்கள். சிறிய வசனப் பகுதி எனக்கு நினைவிற்கு வருகிறது: நாம் நேசிக்கும் பரிசுத்தர்களுடன் பரலோகத்தில் சஞ்சரிப்பதே மகிமையாக இருக்கும். ஆனால் சில சமயங்களில் நமக்குத் தெரிந்த நல்ல மனிதர்களுடன் சபையில் வாழ்வதும் மிக கடினமாக இருக்கும் . எனவே ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துங்கள். இது தேவனின் நீடித்த செய்தியாகும், அவர் தனது பிள்ளைகளில் இதை நிரூபிக்க விரும்புகிறார். வெளியே சென்று அன்பிலே நீடித்து வாழ்வோமாக!

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , நான் உம் வார்த்தையின் படியே உம் பிள்ளைகள் மீது என் அன்பை வார்த்தையிலும் கிரியைகளினாலும் காண்பிப்பேன் என்று உம்மிடம் உறுதியளிக்கிறேன். நான் தனிச்சையாக செய்வதை விட அதிகமாகச் செய்ய எனக்கு அதிகாரம் அளிக்கும் உமது கிருபையின் மேல் நம்பிக்கை வைத்து இதைச் செய்கிறேன். என் இரட்சகராகிய இயேசுவின் மூலம் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து