இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் நமக்கு மிகவும் கிருபையுள்ளவராய் இருக்கிறார் ! அவர் நம்மை ஆசீர்வதித்த அநேக வழிகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள் - சிலருக்கு பொருளாதார ரீதியாகவும், மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கான சிறந்த வாய்ப்புகள் உள்ளன, மற்றவை நித்தியமான ஆழமான தனிப்பட்ட உறவுகளுடன், மேலும் நம் அனைவருக்கும் அவருடன் வாழ்வதற்கான வாக்குறுதியும் கொடுக்கப்பட்டது . ஆனால் இந்த ஆசீர்வாதங்களை நாம் என்ன செய்வோம்? நாம் அவற்றைப் பதுக்கி வைத்து, மறைத்து, நமக்குள் வைத்துக் கொள்வோமா? நாம் அப்படி செய்தால் நமது ஆசீர்வாதங்கள் வறண்டு, விரிசல் அடைந்து, தொய்ந்த இருதயங்களில் வாடி போகும். ஆனால், தேவனின் கிருபை , இரக்கம் மற்றும் நன்மைக்காக நாம் அவருக்கு நன்றி செலுத்துவதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று, இந்த ஆசீர்வாதங்களை நம்மைச் சுற்றியுள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்வதாகும், குறிப்பாக நமக்கு கிடைத்த தயவுக்கு ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாது.

என்னுடைய ஜெபம்

தேவனாகிய ஆண்டவரே, என் கிருபையின் ஊற்றான பிதாவே , நீர் என் வாழ்க்கையில் ஊற்றிய பல வளமான ஆசீர்வாதங்களுக்காக உமக்கு மிகவும் நன்றி. அன்புள்ள பிதாவே , என் இருதயத்தைத் திறந்து, உமது ஆசீர்வாதங்களின் வழியாக என்னைப் பயன்படுத்துங்கள், இதனால் எனது கிரியைகள் மற்றும் அணுகுமுறைகள் மூலம் மற்றவர்கள் உம் அன்பை அறிந்துக்கொள்ள முடியும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து