இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"இது சிறிதான குற்றமில்லாத புறங்கூறுதல் தான்". ஞானமுள்ள போதாகர் புறங்கூறுதலானது சிறியதானதோ அல்லது குற்றமற்றதோ அல்ல என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறார். ஏனெனில், அதின் விளைவுகள் மிகப்பெரிதாயும் , அதன் கேடு பயங்கரமானதுமாயிருக்கிறது. மாறாக, நாம் சமாதானம் பண்ணுகிறவர்களும் குற்றம் செய்யாதவராகவும் இருப்பது மிகவும் நல்லது.

என்னுடைய ஜெபம்

மகிமையின் பிதாவே , நான் சமாதானம் பண்ணுகிறவனாக இருப்பதை விட சமாதானத்தை விரும்புகிறவனாக அநேகவேளை இருக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். நான் திரும்பத் திரும்ப புறங்கூறாமல் இருக்கக் கூடிய குணாதிசயத்தை தந்தருளும் , அதற்குப் பதிலாக குற்றம் செய்யாதவராக இருக்கும் ஞானத்தையும் பெலத்தையும் எனக்குத் தாரும் . சமாதானப் பிரபுவாகிய இயேசுவின் மூலமே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து