இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"எவ்வளவு அற்புதமான தேவனை நாம் தொழுதுக் கொள்ளுகிறோம் !" ஒரு பாடலின் வரிகளை விட, இந்த வார்த்தைகள் நம் அறிவுக்கு புலப்படாத உண்மை. மிகவும் வல்லமையுள்ள , மாபெரிதான , மற்றும் அற்புதமான தேவனாயிறருக்கிறார் , ஆகிலும் அவர் நம்மை அறிந்து அவரது தனிப்பட்ட கவனத்தையும் பராமரிப்பையும் கொடுத்து ஆசீர்வதிக்கிறார் என்பது நம்முடைய புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டது .ஆயினும் அவர் சர்வவல்லமையுள்ள தேவன் மாத்திரமல்ல , இம்மானுவேலரும் கூட, "தேவன் நம்முடன் இருக்கிறார்" என்பதை நமக்கு நினைவூட்டுவதற்காகவே தேவனானவர் தம்முடைய குமாரனாகிய இயேசுவை அனுப்பினார்!

என்னுடைய ஜெபம்

அன்புள்ள தேவனே , வல்லமைமிக்கவராய் இருப்பதற்காகவும் , கிருபையுள்ளவராய் இருப்பதற்காகவும் , என் பட்சத்தில் இருப்பதற்காகவும் உமக்கு நன்றி. எல்லாவற்றிற்கும் மேலாக, பிதாவே , நீர் இருப்பவராகவே இருப்பதற்காக உமக்கு நன்றி! இயேசுவின் நாமத்தினாலே , என் நன்றியையும் துதி ஸ்தோத்திரங்களையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து