இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வீம்புக்காரர்களை தேவன் தாழ்த்துவார். இதைச் செய்ய அவர் ஒரு நாளைக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அந்த நாள் வரும் வரை, தேவனுடைய ராஜ்யத்தின் மக்களாகிய நம்மைச் சுற்றியிருக்கும் தேவபக்தியற்றவர்களின் வெளியரங்கமான எல்லா பொல்லாப்பும் அழிக்கப்படும் என்பதை அறிந்து வாழ வேண்டும். நாசியிலே சுவாசமுள்ள மனிதனை நாம் நம்பக்கூடாது; அது காலையிலே சூரிய ஒளியைக் கண்ட பனியைப் போல ஆவியாகிவிடும் . மனிதனுடைய பெலன் அவனுடைய மரணத்தோடு அழிந்துபோகக் கூடியது - ஒரு மனிதனுக்கு " அவன் நாசியிலே சுவாசமுள்ளது ," ஏசாயா தீர்க்கதரிசி இதை நமக்கு நினைப்பூட்டுகிறார். ஒரு அதிகாரமுள்ள மனிதனின் மூச்சு நின்றுவிட்டால் , அவனுடைய பெலனும் அழிந்துப் போய்விடும். எஞ்சியிருப்பது அவன் விட்டுச்சென்ற அவனுடைய பொல்லாங்கான காரியம் மாத்திரமே . நம்முடைய தேவன் சேனைகளின் கர்த்தர், பரலோகத்தின் தேவன் , சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய யாவே . எந்த ஒரு காரியமும் அல்லது எந்த ஒரு மனிதனும் மெய்யான காரியத்தை ஒப்பிடும்போது அது மங்கிப்போன, மிகச் சிறிய, சிதைந்தபோன பிரதிபலிப்பாகும்.

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , நான் எனது அறிவாற்றல், புத்திசாலித்தனம் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய நுண்ணறிவை நம்பியிருந்த அந்த நேரங்களுக்காக என்னை மன்னித்தருளும் , உம் மீட்பின் மீது நம்பிக்கை வையாமல் , உம் நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டுவதற்கு , தவறான வழிகள், முறையற்ற கூட்டாளிகள் மற்றும் ஊழல் அரசியல்வாதிகளை நம்பியதற்காக என்னை மன்னியுங்கள். தயவு செய்து என்னை பரிசுத்தப்படுத்தி, தூய்மையான இருதயத்தையும், உம் மீது தணியாத வாஞ்சையுள்ளவனாய் உருவாக்குங்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து