இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இது நமது உண்மையான வாக்குமூலமாக இருக்க நாம் எவ்வளவு ஏங்குகிறோம். நாங்கள் இன்னும் பொன்னாக விளங்கவில்லை , ஆனால் அப்படி இருக்க விரும்புகிறோம் . நாங்கள் இன்னும் அவரது அடிச்சுவடை முழுமையாகப் பின்பற்றவில்லை, ஆனால் முயற்சி செய்கிறோம். நாங்கள் பின்மாற்றம் அடையாமல் இருக்க முயற்சித்தோம், ஆனால் சில நேரங்களில் நாங்கள் தடுமாறுகிறோம். நமது சீஷர்துவத்தில் நமது வாஞ்சைகளும்,விருப்பங்களும் நிறைவேறும் வரை நம்முடன் இருக்கப் போகும் அவருடைய கிருபைக்காக தேவனுக்கு நன்றி!

என்னுடைய ஜெபம்

அண்டசராசரத்தையும் அற்புதமாக சிருஷ்டித்தவரும் பராமரிப்பாளருமானவரே , உம்முடைய வழிகளை பின்பற்றுவதில் நான் என் பாவத்தையும், என் பெலவீனத்தையும் அடியேன் ஒப்புக்கொள்கிறேன். பரிசுத்தத்துடனும் மகிழ்ச்சியுடனும் உமக்குச் சேவை செய்ய என் வாழ்க்கையை நான் முற்றிலுமாய் ஒப்புக்கொடுக்காததற்காக என்னை மன்னியும் . என் பாவத்தை மறைத்து, இயேசுவின் தன்மையை என்னில் பூரணப்படுத்தும் உமது கிருபைக்காக உமக்கு நன்றி. அவர் மூலமாய் நான் ஜெபம் செய்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து