இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நான் வாழும் இந்த உலகம் இன்று மிகவும் அழகாக இருக்கிறது - சிறந்த வானிலை, அற்புதமான சபை , அன்பான மனைவி, சிறந்த பிள்ளைகள் மற்றும் உண்மையிலேயே தேவையான எல்லா நன்மையினாலேயும் தேவன் என்னை ஆசீர்வதித்துள்ளார். ஆனால் இந்த காரியங்கள் எல்லா நிச்சயமாக மாறக்கூடியது . நம்முடைய ஜீவன் மரணத்துடனே பிணைக்கப்பட்டுள்ளது. அன்பு பெலனற்ற மக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. பிரிவு என்பது புவியியல் தூரத்தால் பிரிந்திருக்கலாம் , கருத்து வேறுபாடு அல்லது மரணம் ஆகிய காரியங்களினால் நம் வாழ்வின் வெவ்வேறு நேரங்களில் நிச்சயமாக நிகழும். இருப்பினும், கிறிஸ்துவுக்குள் எனக்கு எண்ணிமுடியாத வாக்கு என்னவென்றால், எனது மெய்யான மற்றும் நீடித்த " உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. ." இப்போது என் வாழ்க்கையில் உள்ள விஷயங்கள் நன்றாக இருந்தாலும், அவை எப்போதும் மரணத்தால் பாதிக்கப்படக்கூடியவை - நம்முடைய பிளவுப்பட்ட உலகம், குறைபாடுள்ளவர்கள் மற்றும் தனிப்பட்ட தவறான செயல்களால் மாற்றப்பட்டது. இருப்பினும், கிறிஸ்து வரும்போது, ​​தேவனுடனான எனது வாழ்க்கை மகிமையுடன் பரிபூரணமாகவும், தீமை, மரணம் அல்லது சிதைவு ஆகியவற்றால் கறைபடாததாகவும் இருக்கும். இப்போது அது ஒரு நற்செய்தி - எனக்கு மாத்திரமல்ல , நீங்களும் உங்கள் வாழ்க்கையை இயேசுவை மையமாகக் கொண்டிருப்பதினால் அப்படியாகும் !

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவனே , பாவத்திலிருந்து எங்களைக் காப்பாற்றிய உமது மகத்தான மற்றும் உதாரத்துவமான கிருபைக்காக நன்றி. இயேசுவுக்கு நன்றி, அவருடைய மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதல், உம்முடன் நித்திய வாழ்வில் எங்களின் இறுதி மாற்றத்தை உறுதிசெய்கிறது மற்றும் உம்மைச் சேர்ந்த அனைவருடனும் நாங்கள் கொண்டிருக்கும் உயிர்த்தெழுதல் மீண்டும் இணைகிறது. அந்த நாள் வரை, நாங்கள் உம்மை முகமுகமாய் துதிக்கும் வரை, இயேசுவின் நாமத்தில் எங்கள் நன்றியையும் துதியையும் ஏற்றுக்கொள்ளுங்கள். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து