இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மற்றவர்களை ஆறுதல்படுத்துவதற்காக நாம் ஆறுதல் படுத்தப்படுகிறோம். தேவன் அவருடைய பிரசன்னம் மற்றும் அவரது ஆவியின் ஆறுதலினால் நம்மை ஆசீர்வதிப்பதில்லை. ஏனென்றால் நாம் எல்லோரையும் விட எவ்வளவோ சிறந்தவர்களா, அப்படி இல்லை, மற்றவர்களை ஆயத்தப்படுத்தவும், பெலப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் அவர் நம்மை ஆறுதல்படுத்துகிறார்.என்னுடையதை அவருடைய மகிமைக்காகவும் மற்றவர்களுடைய ஆறுதலுக்கும் பயன்படுத்தும்போது நாம் தேவ கரங்களாய் செயல்பட்டு சகல உபத்திரவங்களிலேயும் அவர்களுக்கு ஆறுதல்செய்கிறவராய் இருக்கிறார்.

என்னுடைய ஜெபம்

இரக்கமுள்ள மேய்ப்பரே , நான் மிகவும் உடைந்து , என்னால் தொடர முடியாமல் போன நேரங்கள் உண்டு . அப்படிப்பட்ட வேளைகளில் தொடர்வதற்கான எனது பெலன் உம் விலையேறப்பெற்ற கிருபையினாலும், இரக்கத்தினாலும் உண்டாகிறது என்பதை நான் அறிவேன். உம் அரவணைப்பையும் அன்பையும் மற்றவர்களுக்கு வழங்க இந்த வாரம் என்னை எடுத்து பயன்படுத்தியருளும் , அதனால் அவர்கள் உம் அன்பான அரவணைப்பை உணர்ந்து, பரலோகத்தில் உம்மை முக முகமாய் தரிசிக்கும் நாளுக்காக அதிகமாக எதிர்நோக்கலாம் . என் சகோதரனாகிய இயேசுவின் மூலமாக நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து