இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனே மாபெரிதான சிறந்த மீட்பர் ! அது அவர் தேர்ந்தெடுத்த நிபுணத்துவம். இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து செங்கடல் வழியாகப் பார்வோனின் கைகளிலிருந்து விடுவித்தாலும் சரி, இன்று இயேசு கிறிஸ்துவின் மூலம் ஒரு பாவியை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்டெடுத்தாலும் சரி, நம்முடைய தேவன் ஒருவரே மாபெரிதான மீட்பர் ! எனவே, பாவம், மரணம்,தீராத நோய், குடும்பச் சண்டை, போதைக்கு அடிமையாகுதல் , பணப் பிரச்சனைகள் , சட்ட விஷயங்கள், மனநோய், துஷ்பிரயோகம், பாலியல் குழப்பம் மற்றும் சோதனையிலிருந்து தேவனின் விடுதலை தேவைப்படும் மக்களுக்காக இன்று தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள். அவருடைய மக்களாகிய நமக்குக் தேவனுடைய ஆசீர்வாதம் தேவை, நம்முடைய இரட்சிப்பு கர்த்தரிடமிருந்து வருகிறது என்று நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிறோம். ஆனால் இன்னும் அதிகமாக, இயேசுவை அறியாதவர்களுக்கு தேவனின் மீட்பு தேவை, அவர்களின் இரட்சிப்பு கர்த்தரிடமிருந்து வருகிறது.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் நீதியுமுள்ள பிதாவே , இன்று என் இருதயத்தில் இருக்கும் நண்பர்களுக்கு வேண்டிய விடுதலையை தாரும் . தயவு செய்து அவர்களை அவர்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, ஆசீர்வாதம், ஆறுதல் மற்றும் உம்முடைய மாறாத பிரசன்னத்தை உறுதிப்படுத்தும் ஒரு சூழலை அவர்களுக்கு கொண்டு வாரும். இயேசுவின் நல்ல நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து