இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசு நம் வாழ்வில் கொண்டு வந்த நம்பிக்கையைப் பற்றி யாவருக்கும் சொல்ல நாம் எப்பொழுதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்! ஆனால் இந்த நம்பிக்கையை குறித்து நாம் பகிர்ந்து கொள்ளும்போது, ​​​​இரண்டு விஷயங்கள் முக்கியம்: நம்முடைய நம்பகத்தன்மை - உண்மையில் இயேசு நம் இருதயங்களின் ஆண்டவரா - மற்றும் நமது குணாதிசயங்கள் - நம் வற்புறுத்தும் அணுகுமுறையில் சாந்தத்தையும் கனத்தையும் காண்பிக்கிறோமா . தேவனுடைய நற் குணத்தின் குறிக்கோள் வாதங்களை வெல்வதல்ல, இருதயங்களை வெல்வதே ! ஆகும்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், அன்பும் நிறைந்த பிதாவே , இயேசுவின் மூலம் உமது கிருபையை வெளிப்படுத்தியதற்காக உமக்கு நன்றி. நான் வேறு எந்த ஒரு செய்தியையும் கேட்டிருப்பேனோ என்று எனக்குத் தெரியவில்லை. உம் கிருபையைப் பிரதிபலிக்கும் வகையில், இயேசுவுக்குள்ளாய் என் நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளத் தேவையான தைரியத்தை எனக்குக் தாரும் . என் ஜீவனுள்ள நம்பிக்கையின் மூலமாக நான் ஜெபம் செய்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து