இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உலகம் உண்டாவதற்கு முன்பே , தேவனானவர் இருந்தார்! இந்த வானமும், பூமியும், அண்டசராசரமும், இயற்கையும் உண்டாவதற்கு முன்பே , இயேசுவானவர் இருந்தார்! சிருஷ்டிக்கப்பட்ட எந்தப் ஒரு பொருளும் உண்டாவதற்கு முன்பே பரிசுத்த ஆவியானவர் இருந்தார். சிருஷ்டிக்கப்பட்ட எந்த ஒரு காரியமும் மறைந்து போன பின்பும் தேவனானவர் இருப்பார். அவருடைய வல்லமையும் மாறாத பிரசன்னமும் இந்த உலகத்தையும், பிரபஞ்சத்தையும், இயற்கையையும் ஒன்றாக வைத்திருக்கின்றன. அவருடைய நிலைநிறுத்தும் வல்லமையும் , செயல்படுத்தும் சக்தியும், நாம் அறிந்தபடி எல்லா ஜீவன்களையும் கிருபையாய் பாதுகாப்பவர் அவரே. அப்படியானால், இவைகளையெல்லாம் அவர் நமக்கு வழங்கினால், இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்ற குறுகிய எதிர்பார்ப்புகள் நம்முடையதாக இருந்தால், அவரைப் போலவே, அவரை முகமுகமாய் பார்த்து, அவருடைய மகிமையை அவருடனே கூட பகிர்ந்துகொள்வது எவ்வளவு நன்றாக இருக்கும் அல்லவா!

என்னுடைய ஜெபம்

இயேசுவே, இந்த நாளின் உமது புதிய கிருபைக்காக நன்றி. நான் வாழும் இந்த நம்பமுடியாத உலகத்தையும் அதில் உள்ள யாவற்றையும் உருவாக்கியதற்காக உமக்கு நன்றி. எல்லா மகிமைக்கும் , கனத்துக்கும் , துதிக்கும் , நன்றிக்கும் உரியவர் நீரே ! அன்புள்ள ஆண்டவரே, நான் உம்மை முகமுகமாய் தரிசித்து , உம்மோடு இருக்கும் எங்களுடைய பிதாவாகிய தேவனின் அற்புதமான அன்பிற்காக நன்றி செலுத்தும் நாளை எதிர்நோக்குகிறேன். அன்புள்ள இயேசுவே, உமக்கும், உமது நாமத்தின் மூலமாய் , என் நன்றிகளையும், துதிகளையும் செலுத்தி ஜெபித்து கொள்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து