இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மனித எதிரிகளுக்கு பயப்பட வேண்டாம் என்று இயேசு சொன்னார் (லூக்கா 12:4-5). நாம் மற்றவர்களைப் பிரியப்படுத்த முயற்சிக்கும்போது, ​​மற்றவர்கள் நமக்கு என்ன சொல்வார்கள் அல்லது என்ன செய்வார்கள் என்று பயப்படும்போது, ​​தேவையற்ற பாதிப்புக்குள்ளாகிவிடுகிறோம். நம் வாழ்க்கை இனி நமக்குச் சொந்தமாக இருக்காது. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், விரும்புகிறார்கள் அல்லது அச்சுறுத்துகிறார்கள் என்பதற்கு நாம் சிறைபிடிக்கப்படுகிறோம். நாம் தேவனை மட்டுமே நம்பி அவரை தொழுதுக்கொள்ள வேண்டும். பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. (1 யோவான் 4:18). நாம் உறுதியாக கர்த்தர் பேரில் நம்பிக்கை வைக்கும்போது, ​​பரலோகத்தின் தேவன் நம்முடைய பாதுகாப்பாய் இருக்கிறார், இப்போதும் இன்னுமாய் என்றென்றுமாய் இருப்பார் .

Thoughts on Today's Verse...

Jesus told us not to fear our human adversaries (Luke 12:4-5). When we try to please others and fear what others may say or do to us, we place ourselves in a position of unnecessary vulnerability. Our lives no longer remain our own. We become captive to what others think, want, or threaten. We are only to trust the Lord and reverence him. Actively placing our faith in the Lord crowds fear out of our hearts with our Father's perfect love (1 John 4:18). As we deliberately put our faith in the Lord, God becomes our security, now and forevermore.

என்னுடைய ஜெபம்

பிதாவே , என்னை எதிர்ப்பவர்களிடமிருந்தும் எனக்கு தீங்கு விளைவிப்பவர்களிடமிருந்தும் என்னைக் காப்பாற்றியருளும் . என் எதிரிகள் என்ன சொன்னாலும், என்ன நினைத்தாலும், என்ன விமர்சித்தாலும், என்ன அச்சுறுத்தினாலும், இயேசுவுக்காக வாழவும், நேர்மையான குணம், கிருபை நிறைந்த இரக்கம், உண்மையுள்ள அன்புடன் வாழ எனக்கு தைரியத்தைத் தாரும் . என் வாழ்வு உமக்கு பரிசுத்த புகழாக அமையட்டும். இயேசுவின் நாமத்தின் மூலமாய் அடியேன் , என் ஸ்தோத்திரத்தையும் , இந்த ஜெபத்தையும் சமர்ப்பிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Please keep me safe, O Lord, from those who oppose me and would do me harm. Give me the courage to live for Jesus and live a life of righteous character, gracious compassion, and faithful love regardless of what my adversaries say, think, criticize, or threaten. May my life be a holy praise to you. In Jesus' name, I offer myself, my praise, and this prayer. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of நீதிமொழிகள்-Proverbs - 29:25

கருத்து