இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்களிடம் பரிசுத்த ஆவி இருக்கிறதா இல்லையா என்பதை அறிய பல்வேறு மார்க்க பிரிவினைக்கூட்டம் உங்களுக்கு எல்லா விதமான வழிகளையும் காண்பிப்பார்கள் . இதற்கு இயேசுவிடம் ஒரு எளிய பதில் உள்ளது."அவர்களின் கனிகளால் நீங்கள் அவர்களை அறிவீர்கள்."ஆவியின் கனிகளுக்கான வரையறையை பவுல் நமக்குத் இங்கு தருகிறார்- அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்போது ஏன் அவற்றை உறுதியாக சொல்லி, இந்தக் கனிகளை முழு அளவில் நம்முடைய தாக்கும்படி தேவனிடம் வேண்டக்கூடாது? ஏனெனில் இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , பரிசுத்த ஆவியின் மூலமாய் நான் உம்மை நோக்கி பார்க்கிறேன் . தயவுக்கூர்ந்து உம்மிடம் உள்ள குணாதிசயத்தை என்னுள் நிறைவேற்றுங்கள் . உம் குமாரனாகிய இயேசுவின் குணங்களை நான் வெளிப்படுத்த விரும்புகிறேன், அவருடைய பரிசுத்த நாமத்திலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து