இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம் வாழ்வில் சம்பவிக்கும் அநேக போராட்டங்கள் வெறும் விபத்தாக நடப்பதல்ல ! தேவனால் நாம் சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை. நம்முடைய போராட்டங்கள் பெரும்பாலும் நமது எதிரியான சாத்தானிடமிருந்து வருகின்றன. தேவனுடனான நமது அர்ப்பணிப்பிலிருந்தும் உறவிலிருந்தும் நம்மைத் பிரித்து செல்வதற்கான சிறந்த உபாய தந்திரத்தை தேடுவதில் அவன் எப்போதும் வகைத் தேடி சுற்றி அலைகிறான் . கர்த்தருடைய கரங்களில் நம்மை உறுதியாகக் ஒப்புக் கொடுத்து, அவருடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்ளுவதினால் ஏற்கனவே இயேசுவினாலும் அவருடைய சிலுவையினாலும் வெட்கத்திற்குட்படுத்தப்பட்ட நம் எதிராளியாகிய பிசாசானவனை மேற்க்கொள்ள நம்மை பெலப்படுத்தும் .

என்னுடைய ஜெபம்

தேவனே , நான் என் எதிராளியாகிய பிசாசானவனை எதிர்த்து நிற்கவும், உமது ஆவியின் வல்லமையால் வெற்றிபெறவும் என்னைப் பலப்படுத்துங்கள், இதினால் ஒரு நாளிலே மறுபடியுமாய் திரும்பி வந்து என்னை ஜெய வீட்டிற்கு அழைத்துச் செல்லும் என் ஜெயவீரராகிய இரட்சகருக்கு நான் கனத்தையும் மகிமையையும் கொண்டு வருவேன். வெள்ளைக்குதிரையின் மேல் ஏறியிருந்த உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவரும் ஜெயவீரருமாகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து