இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை சபையிலே என் சிநேகிதர் சொன்னது எனக்கு இன்னும் நன்றாய் நினைவிருக்கிறது: "முப்பது வெள்ளிக்காசுக்காக ஆண்டவரைக் காட்டிக் கொடுத்ததான யூதாஸை குறித்து நாங்கள் மிகவும் மோசமாக நினைத்தோம் , ஆனால் எத்தனை முறை அவரை ஒன்றுமில்லாத காரியங்களுக்காக மறுதலித்திருப்போம் ?" ஐயோ! நம்மோடு இருக்கும் ஒருவர் தம்மைக் காட்டிக் கொடுப்பார் என்பதை அறிந்த இயேசுவின் மனவேதனையைத் தாங்கிக் கொள்வது நமக்கு மிகவும் கடினமாக உள்ளது. அத்தகைய துரோகத்தை நாம் ஒருபோதும் நம்முடைய வாழ்க்கையில் மெய்யாக்காமல் இருக்க, எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம், தேவனின் பெலனைக் கேட்போமாக ! அது எப்போதாவது அப்படி நம் வாழ்க்கையில் நடந்திருந்தால், பாவத்திலிருந்து தப்பித்து கொள்ள , அவரிடம் திரும்பி வந்து, அவருக்காக விசுவாசமாக வாழ நேர்மையான விருப்பத்துடன் அவருடைய கிருபையை நோக்கி ஓடுவதை உறுதி செய்வோம்!

என்னுடைய ஜெபம்

பிதாவே , என்னுடைய மீறுதலினாலும் அலட்சியத்தாலும் உம்முடைய இருதயத்தை உடைத்த நேரங்களுக்காக நான் வருந்துகிறேன். பிதாவாகிய தேவனே , பல நேரங்களில் என்னுடைய மேன்மையை குறித்ததான எண்ணங்கள் மற்றும் என் பாவம் மற்றும் மரணத்திலிருந்து என்னை மீட்ட உமது குமாரனின் அன்பை காண்பிக்க சோர்ந்துப்போன வேளைகளுக்காக வருந்துகிறேன் . இயேசுவே, உமக்காக நான் இன்னும் துடிப்புடன் வாழ விரும்புகிறேன், அதனால் என் வாழ்வின் காரணமாக மற்றவர்கள் உம்மைப் பார்த்து அறிந்து கொள்வார்கள். இது உம் விலையேறப்பெற்ற நாமத்தில் உள்ளது, இயேசுவே , நான் பிதாவையும் அவருடைய பரிசுத்த நாமத்தையும் கனம் செய்து ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து