இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அடக்கி வைக்கப்பட்ட கோபம் ஒரு வெடித்து சிதற காத்திருக்கிறது. விரைவில் அல்லது பின்னர், மறைந்திருக்கும் விரக்தி நம் சொந்த வாழ்க்கையிலோ அல்லது வேறொருவரின் வாழ்க்கையிலோ தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். மன்னிக்கவும், சமாதானம் செய்யவும் இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்தார் (மத்தேயு 18). கோபத்தை சமாளிக்க வேண்டும். இல்லையெனில், பிசாசு அதை(கோவத்தை )நம் வாழ்வில் நம்மையும் மற்றவர்களையும் துஷ்பிரயோகம் செய்ய பயன்படுத்துவான் . பிசாசுக்கு உங்கள் வாழ்க்கையில் இடங்கொடாமலும் இருங்கள். நீங்கள் அவருக்கு ஒரு அங்குலம் (2.54 செ.மீ.) இடம் கொடுத்தால், அவன் ஒரு மைல் (1.61 கி.மீ.) தூரம் செல்வார்! நாம் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாமல், அதை எதிர்க்கொள்ள பழகுவோம்.

என்னுடைய ஜெபம்

பரலோகத்திலுள்ள பிதாவே, உம்மைக் கோபப்படுத்தும் விஷயங்களில் கோபப்படும் திறனுக்கு நன்றி. தயவு செய்து அந்த உணர்ச்சியை பயனுள்ள வழிகளில் பயன் படுத்த எனக்கு உதவுங்கள், மேலும் தீமையில் என்னை விரட்டியடிக்க உதவுங்கள். தயவுசெய்து என் இருதயத்தை நல்லிணக்கத்திற்குக் தூண்டும் , குறிப்பாக அந்தக் கோபம் உம் க பிள்ளைகளில் ஒருவருக்கு எதிராக இருக்கும்போது. உம்முடைய பரிசுத்த ஆவியின் வல்லமையினால், நீர் என்னை மன்னித்தது போல் நானும் மற்றவர்களை மன்னிக்க உதவுங்கள். என் ஆண்டவரே, இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து