இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீங்கள் தேவனை கடைசியாக எப்போது தேடினீர்கள்? நான் தேவனைப் பற்றிய தெளிவற்ற தேவத்துவ நுண்ணறிவைப் பற்றியோ அல்லது தேவனைப் பற்றி அதிகம் விற்பனையாகும் புத்தகத்தைப் பற்றியோ பேசவில்லை. நீங்கள் பிதாவை நன்றாக அறிந்துகொள்ளவும், அவரை அதிகமாகப் துதிக்கவும் கடைசியாக எப்போது அவரைத் தேடினீர்கள்? நம் இருதயங்களைத் திறந்து, தேவனைத் தேடுவதற்கான பெரிய தேடலில் செல்வோம். லூக்கா 15 இல் உள்ள மனந்திரும்மிய மகனைப் போல, நாமும் அவர் நித்திய வீட்டிற்கு வருவதற்காக அவர் காத்திருப்பதைக் காண்போமாக !

என்னுடைய ஜெபம்

விலையேறப்பெற்ற பரலோகத் தகப்பனே, மகிமையில் மாட்சிமையானவரே , வல்லமையில் மகத்துவமுள்ளவரே, உம் அன்பான பிரசன்னத்துடன் எப்போதும் என் அருகாமையில் இருக்கிறீர் என்று விசுவாசிக்கிறேன் , என் வாழ்க்கையில் உம்மைப் பற்றிய ஆழமான மற்றும் தனிப்பட்ட அறிவையும் அனுபவத்தையும் எனக்குக் கொடுங்கள். பரலோகத்தில் நான் உம்மை முகமுகமாய் பார்க்கும் நாள் வரை, தயவுசெய்து என்னை உம்முடன் நெருங்கி வரச் செய்யுங்கள். இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து