இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்முடைய பாவங்களை அறிக்கையிடுவது என்பது நம்முடைய பாவத்திற்காக இரண்டு காரியங்களைச் செய்வதாகும். ஒன்று, தேவனுடைய பார்வையில் பாவம் என்னவாக இருக்கிறது என்று நாம் உணர்கிறோம். மற்றொன்று, நாம் நம்முடைய இரகசியங்களிலிருந்து விடுபட்டு, நமது பலவீனம், தவறுகள் , தோல்விகள் மற்றும் பாவங்களைப் குறித்து மற்றொரு கிறிஸ்தவரிடம் உண்மையாக அறிக்கையிட வேண்டும் . யாக்கோபின், வார்த்தைகள் வல்லமை வாய்ந்தது. இந்த அறிக்கையிடுதல் மன்னிப்பை மாத்திரம் கொடுப்பதில்லை, இன்னுமாய் சொஸ்தமடையவும் செய்கிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்த பிதாவே , நான் பாவம் செய்தேன். நான் இப்போது எனது இரகசியமான எல்லா பாவங்ளையும் அறிக்கையிடுகிறேன் . உம்முடைய மன்னிப்பையும், சோதனையையும் மேற்கொள்ளவதில் என்னைப் பலப்படுத்த உமது பரிசுத்த ஆவியை தந்தருளும் . நான் உமக்காக வாழ விரும்புகிறேன், என்னுடைய சொந்த பாவமமோ, அல்லது மற்ற எந்தப் பாவமோ என்னைச் சிறைபிடித்து , உம்மிடமிருந்து என்னை பிரித்து, தூரமாய் கொண்டு செல்லாதபடி விரும்புகிறேன். இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து