இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சிறுவயதுமுதல் ! இயேசுவின் மீதான நம்பிக்கை, பரிசுத்த வேதாகமத்தில் உள்ள வரலாறுகள் மற்றும் விசுவாசமுள்ள தாலாட்டுப் பாடல்கள் ஆகியவற்றால் சூழப்பட்ட உலகிற்கு உங்களை அழைத்துச் சென்ற ஆவிக்குரிய அம்மா அல்லது அப்பா உங்களிடம் இருந்தால், தேவனை துதித்து, புகழ்ந்து, ஸ்தோத்தரித்து அவர்களுக்காக நன்றி சொல்லுங்கள். நீங்கள் அவ்வாறு பெறவில்லையென்றால் , உங்கள் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு வாழ்க்கையில் இந்த காரியங்களை துவக்கமுதல் தருவதாக உறுதி எடுத்துக்கொள்ளுங்கள் . ஆம், இளமைப் பருவத்திலும், முதுமைப் பருவத்திலும் தனிப்பட்ட விசுவாசம் வெற்றி பெறும், ஆனால் சிறுவயது முதல் விசுவாசத்தினால் சூழப்பட்டிருப்பது ஒரு சிறந்த தொடக்கமாகும். ஒரு குழந்தையின் வாழ்க்கையில் அன்பு, நம்பிக்கை, விசுவாசம் மற்றும் இயேசுவின் வாக்குறுதியால் நிரப்புவது ஒரு பெற்றோர் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய ஈவுகளில் ஒன்றாகும்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், சதா காலமும் எங்கள் மேல் கவனமுள்ள பிதாவே , விசுவாசமுள்ள பெற்றோராக அந்த மாபெரிதான ஈவுக்காக உமக்கு நான் நன்றி கூறுகிறேன். விசுவாசமுள்ள நம்மில் அதிகமானோர் நம்முடைய விசுவாசத்தை நம் பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் விண்ணப்பம் செய்கிறேன் . தயவுக்கூர்ந்து என் குடும்பத்தையும் என் வாழ்க்கையையும், என் பிள்ளைகளும், பேரக்குழந்தைகளும் எளிதாக ஆண்டவராகிய இயேசுவை விசுவாசிக்கவும் அவருக்குள் மகிழ்ச்சியையும், பாதுகாப்பும் பெறக்கூடிய இடமாக ஆக்குங்கள். அவருடைய விலையேறப்பெற்ற நாமத்தினாலே , நான் உம்மைப் போற்றுகிறேன், நன்றி செலுத்துகிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து