இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் நம் கவலைகளை கீழே போட மறுப்பதால் அவை பெரும்பாலும் கனமாக இருக்கின்றன. நாம் நம் கவலைகளை கர்த்தர் மீது வைப்பதில்லை. இன்றே நம் எதிர்காலத்தை அவர் கரங்களில் மனப்பூர்வமாக ஒப்படைப்போம். இன்று நம் கவலைக்குரிய பயங்களை அவருடைய பராமரிப்பில் நம்புவோம். அவர் நம்மை நேசிக்கிறார் என்பது நமக்குத் தெரியும். இயேசுவுக்குள் நம்மை இரட்சிக்க அவர் செய்த காரியங்களால் அவர் நம்மைத் தாங்கவும் ஆறுதல்படுத்தவும் ஏங்குகிறார் என்பது நமக்குத் தெரியும். இன்று நம் கவலைகள் அனைத்தையும் கர்த்தர் மீது வைப்போம், ஏனென்றால் அவர் நம் ஒவ்வொருவரையும் கவனித்துக்கொள்கிறார்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்த தேவனும் அன்புள்ள பிதாவே, என் பயங்கள், கவலைகள், பதட்டங்கள் மற்றும் சுமைகளை நான் மனப்பூர்வமாக உமது கரங்களில் ஒப்படைக்கிறேன். இந்த நிகழ்வுகளின் விளைவை மாற்ற எனக்கு மிகக் குறைந்த பெலன் இருக்கிறது என்பதை நான் அறிவேன், ஆனால் இந்த எல்லா சூழ்நிலைகளிலிருந்தும் உமக்குப் பிரியமானதையும் எனக்குச் சிறந்ததையும் நீர் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். என் கவலையான எண்ணங்களுக்காகவும், என் கவலையை ஒரு பாரமான கற்களை போன்று மாற்றியதற்காகவும் என்னை மன்னியுங்கள், அது என் முழு நம்பிக்கையையும் உம்மிடமிருந்து பறிக்கிறது. உமது பரிசுத்த ஆவியின் வல்லமையாலும் பிரசன்னத்தாலும் உம்மை மேலும் நம்புவதற்கு என்னைப் பலப்படுத்தி, அதிகாரப்படுத்துங்கள். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து