இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன், இந்த புதிய கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் - அவர்கள் செய்ய விரும்பும் நற்காரியங்களை அதிகப்படுத்தவும், இன்னுமாய் விசுவாசத்தினால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு நற்கிரியையும் முழுமையாக ஆசீர்வதிக்கவும், அவர்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் நிறைவேற்ற வேண்டும் என்று பவுலானவர் ஜெபிக்கிறார். பவுலானவர் செய்த ஜெபத்தை போல நீங்களும் இந்த புதிய கிறிஸ்தவர்களுக்காக ஜெபிக்கிறீர்கள் என்று அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமா ? ஒன்றுசேர்ந்து, தங்கள் நோக்கங்களினாலும்,கிரியையினாலும் தேவனை கனம்பண்ண விரும்பும் மற்ற விசுவாசிகளை பெலப்படுத்தவும் ஊக்குவிக்கவும் வேண்டியதான வழிகளைக் கண்டுபிடிப்போம்!

என்னுடைய ஜெபம்

பெலமும் வல்லமையுமுள்ள பிதாவே , இன்று என் இருதயத்தில் உள்ள பல புதிய கிறிஸ்தவர்களை ஆசீர்வதியும் . அவர்களின் வாழ்க்கையில் உம்முடைய சமூகத்தை உணர்ந்துக்கொள்ள அவர்களுக்கு உதவியருளும் . தயவு செய்து அவர்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சியிலும், அவர்கள் உம்மை கனம் பண்ண மற்றும் உம்முடைய ஜனங்களை ஆசீர்வதிக்க கொண்டுள்ள நோக்கங்களிலுள்ள நன்மைகள் யாவையும் நீர் அதிகப்படுத்த வேண்டும். தீயவரிடமிருந்து அவர்களைக் காப்பாற்றுங்கள். இயேசுவின் நாமத்தினாலே , இந்த ஆசீர்வாதத்தைக் கேட்கிறேன். ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து