இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்கள் கடவுசீட்டு(பயண நுழைவுச் சீட்டு ) என்ன சொன்னாலும் பரவாயில்லை, நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தால், இந்த உலகத்தில் உள்ள எந்த ஒரு நாடும் பிடித்துவைக்க முடியாது, பூமியில் எந்த ஒரு எல்லைகளும் உங்களை ஒருபோதும் அடக்கி வைக்க முடியாது , உங்களுக்கு மேலே எந்த ஆளுகையும் இல்லை , ஆனால் இயேசுவும்,பரலோக ராஜ்யமும் உங்களுக்கென்று மேலே உண்டு . இந்தோனேசியாவின் வம்சாவழி பழங்குடியினர், ஆப்பிரிக்காவில் உள்ள கிறிஸ்தவ அகதிகள், எகிப்தில் உள்ள பெடோயின் சகோதரர், ஆவி நிறைந்த பிரேசிலியன் சகோதரிகள் , ஹாங்காங்கில் உள்ள தொழிலதிபர் ஆகிய இவர்களுக்கும் உங்களுக்கும் ஒரே மாதிரியான நம்பிக்கையுண்டு , இயேசுவின் நாமத்தில் ஜெபம் செய்ய முழங்காலிடும் நபர்களை விட, உங்கள் அருகில் உள்ள வீட்டுக்காரர்கள் கிறிஸ்துவை ஆண்டவராகவும் இரட்சகராகவும் அறியவில்லை என்றால் அவர்கள் இயேசு கிறிஸ்துவை அறியச் செய்யுங்கள்.

என்னுடைய ஜெபம்

மகிமையுள்ள தேவனே,சர்வவல்லமையுள்ள பிதாவே, ஒவ்வொரு மொழி, இனம் , தேசம் ஆகியவற்றிலுள்ள மக்கள், உம் சிங்காசனத்தைச் சுற்றியுள்ள தேவதூதர்கள் மற்றும் மூப்பர்களுடன் சேர்ந்து உம்மை என்றென்றும் மகிழ்ச்சியுடன் வணங்கும் நாளை நான் எதிர்நோக்குகிறேன். எங்களை ஒன்றாக ஆக்குங்கள் , இங்கே இல்லையென்றால், விரைவில். ஆண்டவராகிய இயேசுவே, தயவு செய்து வாருங்கள் என்று உம்மிடம் வேண்டுகிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து