இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இரக்கம். இரக்கம் என்பது பரிதாபமும் அல்ல , கோபமும் அல்ல , அவமானமும் அல்ல , பொறுமையின்மையும் அல்ல , சகிப்புத்தன்மையும் அல்ல , நிராகரிப்பும் அல்ல , ஆனால் இரக்கம், என்பது என் பிதாவாகிய தேவன் , எனக்கு கொடுப்பதாகும் . என் உலகத்திலே வந்து அதை இயேசுக்குள்ளாய் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு என் வலியை அவர் கவனித்திருக்கிறார் .

என்னுடைய ஜெபம்

இரக்கங்களின் பிதாவே , அனைத்து ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவரே, எனது போராட்டங்கள் மற்றும் பிரச்சனைகளைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் அக்கறை கொள்வதற்கும் மட்டுமல்லாமல், இயேசுவிலும் பரிசுத்த ஆவியிலும் எனக்கு உதவி அனுப்பியதற்காக உமக்கு நன்றி. இவைகளின் மூலமாய் உம் அன்பையும் இரக்கத்தையும் நான் அறிவேன், மற்றொன்றால் உம் வலிமையையும், வல்லமையும் அறிவேன். உம் ஆறுதலின் ஆவி என் உறவுகளில் காணப்படட்டும். இயேசுவின் கிருபையின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து