இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்மைப் பற்றிய பொய்களையும் தவறான வதந்திகளையும் பரப்புவதற்கு நேர்மையற்ற மற்றும் தீய நபர்களைப் பயன்படுத்தி நாம் சோர்ந்துப் போகும்படி சாத்தான் ஒரு வழியைக் கொண்டிருக்கிறான். நம்முடைய சீஷத்துவத்தில் நாம் மிகவும் உற்சாகமாய் இருக்கும்போது இது அடிக்கடி நிகழ்கிறது. இப்படிப்பட்ட துன்மார்க்கரின் விமர்சனங்கள், நித்திய மற்றும் சர்வவல்லமையுள்ள தேவனைப் பிரியப்படுத்துவதற்கான நமது முயற்சிகளைத் தடுத்துவிடக் கூடாது! இதுபோன்ற தருணங்களில் , நமக்கு முன் வாழ்ந்த மிக சிறந்த சீஷர்களின் வேண்டுதல்களை நாம் இவ் வேளையிலே பயன்படுத்தலாம். நாம் தேவனிடம் நம்முடைய விண்ணப்பங்களை கூக்குரலிட்டு ஜெபிக்கலாம்: "நான் துதிக்கும் தேவனே, மவுனமாயிராதேயும். துன்மார்க்கனுடைய வாயும், கபட்டுவாயும், எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது; கள்ள நாவினால் என்னோடே பேசுகிறார்கள். நாம் அவ்வாறு செய்யும்போது, ​​மீட்பு மற்றும் நியாயப்படுத்துதலுக்காக தேவனிடம் ஜெபம் செய்ய கடந்த காலங்களில் உபயோகித்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதால், நம்முடைய போராட்டங்களில் நாம் தனித்து விடப்படுவதில்லை என்பதை எப்பொழுதும் அறிந்துக்கொள்ளலாம் .

என்னுடைய ஜெபம்

அன்புள்ள தேவனே , என்னை காயப்படுத்தவும், ஊனப்படுத்தவும் சாத்தானால் அதிகாரம் பெற்ற வதந்திகளை பரப்புபவர்கள் , அவதூறு மற்றும் பொய் கூறுபவர்களின் வாயை கட்டுங்கள் . தீயதை தோற்கடிப்பது மட்டுமல்லாமல், என் வாழ்வில் உள்ள நன்மையான அனைத்தையும் உமது மகிமைக்கு வலுப்படுத்துங்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து