இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பயனற்ற பல காரியங்களிலிருந்து அல்லது பல பயனற்ற இடங்களிலிருந்தும் நாம் ஞானத்தைத் தேடலாம். நம்முடைய ஆராய்ந்துமுடியாத தேவனுக்கு முன்பாக நாம் முழு மனதோடே நம்மைத் தாழ்த்தி, அவருக்குத் உரிய கனத்தையும் மகிமையையும், ஆராதனையையும் கொடுக்கும்போதுதான் அந்த மகா மேன்மையான ஞானம் நமக்கு கிடைக்கும். நாம் இவைகளை செய்யும்போது, ​​இந்த வாக்குத்தத்தத்தை நாம் உறுதிசெய்யலாம்: "கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்". (நீதிமொழிகள்- 2:6)

என்னுடைய ஜெபம்

அற்புதமான மற்றும் அதிசயமான தேவனே , மிகப்பெரிய இப்பிரபஞ்சத்தில் மற்றும் நீர் உண்டுபண்ணின சிருஷ்டிப்பில் உள்ள நம்பமுடியாத நுணுக்கமான காரியங்கள் , அடியேனை வாயடைக்க செய்கிறது . அறியாமை மற்றும் அகங்காரம் கொண்ட என் குறைகளை மன்னித்து உமது மெய் ஞானத்தின் வழியில் என்னை நடத்துவீராக . இயேசுவின் நல்ல நாமத்தின் மூலமாய் ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து