இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் பலவிதமான விஷயங்களை பின் தொடருகிறோம். ஒன்று மட்டுமே தேவை. ஒரு கை நிறைய பணம் , ஒரு பெரிய ஆஸ்தி மற்றும் நிறைய மேன்மையான காரியங்கள் ஆகியவற்றை ஆதாயப்படுத்திக்கொண்டாலும் , கர்த்தர் இல்லாமல் நீங்கள் உச்ச இடத்தை அடைந்துவிட்டோம் என்று முழுமையாய் சொல்ல முடியாது .இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், உங்களுடைய பரபரப்பான வேலையின் நடுவில், நீங்கள் விழித்து பார்க்கும்போது கிறிஸ்து இல்லாத வாழ்க்கையில் , ஜீவன் அற்ற பண்படுத்தப்படாத நிலத்திலே உங்களைக் கண்டுகொள்ளுவீர்கள் . நிலையற்ற காரியங்களை பின்தொடர்ந்து , நம் ஜீவனையும் , ஆத்துமாவையும் , நோக்கத்தையும் இழக்காமல் இருப்போமாக .

என்னுடைய ஜெபம்

பிதாவே, என் சுயவிருப்பதின் மேல் நோக்கமாய் இருப்பதை விட, எனது முன்னுரிமைகளை சரியாகவும், என் வாழ்க்கையை பரிசுத்தமாகவும், என் இதயத்தை உமது விருப்பத்திற்கு திறந்து வைக்கவும் எனக்கு உதவுங்கள். இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து