இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வாழ்க்கையின் இன்றியமையாத காரியம் என்னவென்றால் நாம் நம் சுயத்தை வெறுத்து, இயேசுவையும் அவருடைய சித்தத்தையும் நம் வாழ்கையில் வரவேற்பதாகும். உன்னை இரட்சிப்பதற்காக தன்னுடைய ஜீவனையே கொடுத்தவருக்காக உன் ஜீவனை கொடுக்க மறக்க வேண்டாம் . நாம் அவருக்காக நம் ஜீவனை இழக்கும்போழுது , ​​அந்த ஜீவனை அவருடன் நித்தியமாக திரும்பப்பெற்றுக்கொள்ளலாம் .

என்னுடைய ஜெபம்

பரிசுத்த தேவனே, இயேசுவே கர்த்தர், உமது நேச குமாரன், என் இரட்சகரும் இராஜாதி இராஜாவுமாய் இருக்கிறார் என்று நான் நம்புகிறேன். உம்முடைய மகிமைக்காக அவருடைய வாழ்க்கை என்னுடைய வாழ்வில் வெளிப்பட வேண்டும் என்று நான் ஏங்குகிறேன். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து