இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய ஊழியத்தில் ஸ்திரீகள் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இது முதல் நூற்றாண்டில் மக்கெதோனியா மற்றும் அகாயாவில் (பிலிப்பு , தெசலோனிக்கேயா , பெரேயா, அத்தேனே மற்றும் கொரிந்து) குறிப்பாக உண்மையாக இருந்தது. இந்த ஒவ்வொரு இடத்திலும், சுவிசேஷமானது சமூகத்தில் உள்ள பல முக்கியமான ஸ்திரீகளை தொட்டது. மிஷனரி நிறுவனத்தை ஆதரிப்பதிலும் (லீதியாள் - அப்போஸ்தலர் 16:15, 40) மற்றும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுடன் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்வதிலும் அவர்கள் முக்கியப் பங்கு வகித்தனர் என்பதை நாங்கள் அறிவோம் (எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் - பிலிப்பியர் 4:2-3). ஆகவே, தயவு செய்து இன்றே நேரத்தை ஒதுக்குங்கள், உங்கள் சபையிலுள்ள ஆவிக்குரிய ஸ்திரீகள் , கர்த்தருடைய பணிக்கும் உங்களுக்கும் எவ்வளவு முக்கியம் என்பதைத் தெரியப்படுத்துங்கள்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , தேவன் மீது விசுவாசம் கொண்ட ஸ்திரீகளுக்காக உமக்கு நன்றி. தயவு செய்து அவர்களையும் அவர்களின் ஊழியங்களையும் ஆசீர்வதித்து, அவர்கள் உங்களுக்கு மகிமையைக் கொண்டு வரும்போது, ​​அவர்களின் முயற்சிகளை பெலமுள்ளதாகவும் , மற்றவர்களுக்கு அருளும் ஆசீர்வாதமாகவும் செய்யுங்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து