இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சாமுவேல் இளம் வயதிலேயே தனது ஊழியத்தைத் தொடங்கினார் (1 சாமுவேல் 1:1-28). இருப்பினும், நியாயாதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இடையில் உள்ள தலைமுறைகளை இணைப்பதில் நீண்ட ஆயுட்காலம் மூலம் அவர் இஸ்ரேலுக்கு தேவனின் ஊழியராக அத்தியாவசியமானார். அந்த முழு காலகட்டத்திலும் , தேவனானவர் சாமுவேலுடன் இருந்தார், அவருடைய ஊழியத்தை பலப்படுத்தினார். தேவன் சாமுவேலின் வார்த்தைகளுக்கு அதிகாரம் அளித்து, அவற்றைத் துல்லியமாகவும், அழுத்தமாகவும், உறுதியளிக்கவும் செய்தார். இன்றும் தேவன் தம்முடைய ஊழியர்களிடத்திலும் அவ்வாறே செய்ய ஜெபிப்போம். நாம் இன்று இயேசுவின் குடும்பத்தில் வளர்ந்து வரும் இளம் சாமுவேலை மற்றும் தெபோராளை போன்ற நபர்களை கண்டறிந்து (நியாயாதிபதிகள் 4:4-9, 14-16) அவர்களை ஊக்குவிக்க வேண்டும்! தேவன் தம்முடைய ஊழியர்களை வாழ்நாள் முழுவதும் திறம்பட பயன்படுத்துவாராக, அவர்களுடைய வார்த்தைகள் ஒன்றும் தரையிலே விழாமல் இருக்கட்டும்.

என்னுடைய ஜெபம்

இன்று, தேவனே , உலகம் முழுவதும் உமது வார்த்தையைப் பிரகடனப்படுத்தும் உமது உண்மையும், உத்தமமுள்ள ஊழியர்களுக்கு அதிகாரம் அளிக்கும்படி நான் உம்மை வேண்டுகிறேன். சாத்தானின் தந்திரமான தாக்குதல்களில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கும் காலங்களை கொடுத்து தயவுசெய்து அவர்களை ஆசீர்வதித்தருளும் . சுகத்தினாலும் பெலத்தினாலும் அதிக ஆர்வத்துடனும் அவர்களை ஆசீர்வதியுங்கள். தயவு செய்து உம்முடைய கிருபையினால் அவர்களுக்கு பயனுள்ள ஊழியங்கள் நிறைந்த நீண்ட ஆயுளை கொடுத்தருளும் . மேலும், அன்பான பிதாவே , தயவுசெய்து இன்று உம்முடைய திருச்சபையில் இளம் சாமுவேல்களையும் தெபோராள்களையும் ஏற்படுத்தும் , இதனால் உம்முடைய மக்களின் எதிர்காலம் விசுவாசத்தால் நிரப்பப்படும்! இயேசுவின் நல்ல நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து