இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் அதிகாரம் என்னும் கலாச்சாரத்திலும், காலத்திலும் வாழ்கிறோம். "___ என் அதிகாரம்." அந்த சொற்றோடரை நிரப்புங்கள் . ஆனால் தேவனின் பிள்ளையாக இருக்க எங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை . தேவனுடைய கிருபையால் நமக்கு அந்த அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. தேவன் மாபெரும் விலையை கொடுத்து நம்மை மீட்டெடுத்ததன் மூலம் இந்த அதிகாரம் நமக்கு கிடைத்தது. இயேசு, தேவனுடைய குமாரன், அவர் இப்பூமிக்கு வந்து, வாழ்ந்து, மரித்து, மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டார். நாம் விசுவாசத்தின் மூலம் இந்த கிருபையைப் பெறுகிறோம்: நாம் இயேசுவை ஆண்டவராக விசுவாசிப்பதால் தேவன் நமக்குப் புதிய பிறப்பைத் தருகிறார், மேலும் நாம் ஞானஸ்நானம் பெற்று பரிசுத்த ஆவியின் வல்லமையால் மீண்டுமாய் ஜெநிபிக்கப்படுகிறோம் (யோவான் 3:3-7; தீத்து 3:3-7). தேவனால் பிறப்பது - உன்னதங்களிலிருந்து பிறப்பது, "மீண்டுமாய் பிறப்பது" - என்பது தேவனின் குடும்பத்தில் சுவீகார புத்திராயிருப்பதற்கான ஒரு ஈவு. இந்த விலையேறப்பெற்ற மீட்பு தேவனின் குடும்பத்தில் முழு சுதந்திரவாளியாயிருப்பதற்கான அனைத்து அதிகாரங்களையும் நமக்குக் கொண்டுவருகிறது (கலாத்தியர் 3:26-29; கலாத்தியர் 4:1-7). இந்த கிருபை , இந்த ஆசீர்வாதம் , இந்த சுதந்திரம் , இந்த அதிகாரம், இவைகளை நாம் சாதரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்! நாம் இப்போது தேவனின் பிள்ளைகள் (1 யோவான் 3:1-3). இந்த கிருபைக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, நம் பிதாவின் நீதியான குணத்தையும், தயவையும் , உண்மையுள்ள அன்பான சாந்தத்தையும் பிரதிபலித்து அவரைப் போல் வாழ்வோம்.

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , என்னை உம் குடும்பத்தில் சுவீகாரபுத்திரராக சேர்த்துக் கொண்டதற்காக உமக்கு நன்றி. உம் செல்வாக்கு, குணாதிசயம், இரக்கம், பரிசுத்தம், தயவு , நீதி மற்றும் அன்பு ஆகியவற்றை என் வாழ்க்கை பிரதிபலிக்கட்டும். என் பிதாவே, நான் உம்மைப் போல இருக்க விரும்புகிறேன். என்னை தன்னிடமாய் சேர்த்துக் கொண்ட என் மூத்த சகோதரரைப் போல நான் வாழ விரும்புகிறேன். நான் பரிசுத்த ஆவியின் வல்லமையால் உம் குடும்பத்தில் பிறந்தது போல, தயவு செய்து உமது ஆவியால் என்னையும் நிரப்பி, இந்த நாளில் நான் கையிட்டு செய்யும் மற்றும் பேசும் வார்த்தைகள் எல்லாவற்றிலும் என்னை இயேசுவைப் போல மாற்றுங்கள். என் மூத்த சகோதரராகிய இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து